வந்துவிட்டார்
தற்போது இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா மும்பை வந்துள்ளார். மற்ற வீரர்கள் எல்லோரும் இப்போதும் லண்டனில்தான் இருக்கிறார்கள். ஆனால் ரோஹித் சர்மா மட்டும் மனைவியுடன் தனியாக இந்தியா திரும்பி உள்ளார்.
என்ன செய்தார்
மும்பை வந்த ரோஹித் சர்மா அவரின் காரில் மனைவியுடன் சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில் அவரின் குழந்தை முன் சீட்டில் அம்மா மடியில் அமர்ந்துள்ளது. ரோஹித் சர்மாவின் மனைவி சீட் பெல்ட் அணியவில்லை. ரோஹித் சர்மா மட்டும் சீட் பெல்ட் அணிந்து இருந்தார்
|
என்ன மோசம்
பாதுகாப்பு இல்லாமல், சீட் பெல்ட் அணியாமல் ரோஹித் மனைவி அமர்ந்து இருந்தார். முன் சீட்டில் ரோஹித் சர்மாவின் மனைவி மடியில் குழந்தையை வைத்து இருப்பது இருப்பது பெரிய சர்ச்சையாகி உள்ளது. குழந்தையை இப்படி எல்லாம் வைத்து பயணம் செய்ய கூடாது. குழந்தைகள் அமர சிறிய சீட் பெல்ட் கொண்ட தனி இருக்கைகள் இருக்கிறது. அதை பயன்படுத்த வேண்டும். இப்படி செல்வது பாதுகாப்பில்லை .
ஏன் இப்படி
ஏன் ரோஹித் சர்மா இப்படி இருக்கிறார். குழந்தையை வைத்து இப்படி எல்லாம் பயணம் செய்ய கூடாது. குழந்தையை அவர் சரியாக பாதுகாக்கவில்லை என்று பலர் குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள். பல வெளிநாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் இந்த கமெண்டை செய்துள்ளனர். மற்ற இந்திய வீரர்களுக்கு முன்பாகவே இவர் மும்பை வந்தது ஏன் என்ற கேள்வி ஏற்கனவே நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.