என்ன இடம்
இந்த போட்டியில் நியூசிலாந்து வீசிய ஐம்பதாவது ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இங்கிலாந்து ஆடிக்கொண்டு இருந்தது. போல்ட் வீசிய அந்த ஓவரின் 4 வது பந்தில் 2 ரன்கள் எடுக்க இங்கிலாந்து வீரர்கள் ஓடினார்கள். அப்போது நியூசி வீரர் குப்தில் பந்தை சரியாக தடுத்து தூக்கி கீப்பரிடம் வீசினார். ஆனால் அது ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு ஓவர் த்ரோவாக மாறி பவுண்டரி சென்றது. இதனால் அந்த பந்தில் 6 ரன்கள் தேவையின்றி சென்றது.
என்ன கேள்வி
இந்த நிலையில் எப்படி இதற்கு 6 ரன்கள் வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. பந்து ஓவர் த்ரோ மூலம் பவுண்டரி செல்லவில்லை. ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டுதான் பவுண்டரி சென்று இருக்கிறது. இதற்கு எப்படி பவுண்டரி கொடுத்தார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.
இன்னொரு கேள்வி
அதேபோல் கடைசியில் சூப்பர் ஓவரில் போட்டியின் முடிவு தெரியவில்லை. சூப்பர் ஓவரில் இரண்டு அணிகளும் ஒரே ரன்களை எடுத்தது. கடைசியில் பவுண்டரி கணக்கின்படி இங்கிலாந்து வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதுவும் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எப்படி பவுண்டரி கணக்கை வைத்து முடிவை தீர்மானிக்கலாம் என்று பலர் கேட்கிறார்கள்.
|
ரோஹித் சர்மா
இப்படி தொடர்ச்சியாக ஐசிசி விதிகள் எல்லாம் சர்ச்சைக்கு உள்ளானதை அடுத்து தற்போது இந்திய அணியின்
துணை கேப்டன் ரோஹித் சர்மா அதுகுறித்து டிவிட் செய்துள்ளார். அதில், சில ஐசிசி விதிகளை நாம் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.