புகாரில் உண்மை இல்லை
இந்த நிலையில் ஷமி குறித்த புகார் பிசிசிஐ மூலம் விசாரிக்கப்பட்டது. தற்போது ஷமியின் குழந்தைகள் அவரின் மனைவியுடன் இருக்கிறார்கள். ஹசின் ஜகான் சொன்ன சூதாட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. பிசிசிஐ இது தொடர்பாக நடத்திய விசாரணையில் ஹசின் ஜகான் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று கூறப்பட்டது.
ஆனால் பாலியல்
ஆனால் அவர் கொடுத்த பாலியல் புகார்கள் குறித்த முழு உண்மை இன்னும் வெளியாகவில்லை. மனைவிக்கு தெரியாமல் நிறைய பெண்களுடன் தொடர்பில் இருந்ததை பிசிசிஐ விசாரணையில் ஷமி ஒப்புக்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது அவரின் தனிப்பட்ட வாழ்க்கை என்பதால் கிரிக்கெட் போட்டியில் இது பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
ஆடுகிறார்
தற்போது இவர் இந்திய அணிக்காக உலகக் கோப்பை போட்டியில் ஆடி வருகிறார். கடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இவர் கடைசி ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வரிசையாக எடுத்து ஹாட் டிரிக் மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இது குறித்து தற்போது ஹசின் ஜகான் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்திய வீரர்கள் எல்லோரும் நன்றாக விளையாடினார்கள்.
நல்லது
இந்திய வீரர்கள் எல்லோரும் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார்கள். தங்கள் திறமையை அவர்கள் நிரூபித்து வருகிறார்கள். இப்படியே அவர்கள் தொடர்ந்து ஆட வேண்டும். இந்தியா இப்படி தொடர்ந்து ஆடினால் இந்திய அன்னிக்குத்தான் உலகக் கோப்பை என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அவர் பேட்டியில் எங்கும் ஷமி குறித்தோ அவரின் ஹாட்டிரிக் குறித்தோ பேச மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.