தோனியின் ஆட்டம்
இந்த நிலையில் தோனியின் ஆட்டம் குறித்து பேசிய அக்தர், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரின் பலம் ஆப்கானிஸ்தான் போட்டிக்கு எதிராக வெளியே தெரிந்துவிட்டது. அவர்களில் பல உண்மைகளை நீண்ட நாட்களுக்கு மறைக்க முடியாது. கோலி இல்லாமல் அந்த அணி மிகவும் கஷ்டப்படும்.
எப்படி பேட்டிங்
கோலி பேட்டிங் சரியாக இல்லையென்றால், இந்திய அணி அவ்வளவுதான். நல்ல பேட்டிங் லைன் அப் இருப்பதாக சொன்ன அணிதான் இந்திய அணி. ஆனால் ஆப்கானிஸ்தான் போட்டியில் அது வேலை செய்யவில்லை. தோனி அந்த போட்டியில் மிக மிக மெதுவாக ஆடினார். அங்கு சில பந்துகள் மோசமாக பவுன்ஸ் ஆனது தெரியும்.
மிக மோசம்
ஆனாலும் தோனி அப்படி எதுவாக ஆடியது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக மாறிவிட்டது. ஆனால் இந்தியா அதை தற்போது உணர்ந்துவிட்டது. அடுத்த போட்டியில் இந்தியா விழித்துக்கொள்ளும். தோனி சரியாக ஆடாத காரணத்தால் நிறைய வதந்திகள் வரப்போகிறது. அவருக்கு எதிராக நிறைய வதந்திகள் வரும். அவர் அதை எதிர்கொள்ள வேண்டும்.
என்ன வதந்திகள்
நான் வதந்திகள் என்று எதை சொல்கிறேன் என்று எல்லோருக்கும் தெரியும், என்று அக்தர் குறிப்பிட்டார். இந்த நிலையில் அக்தர் தோனியின் ஓய்வு குறித்துதான் பேசுகிறார். தோனியின் ஓய்வு வதந்திகள் நிறைய வரப்போகிறது, அதை அவர் எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்துதான் அவர் எச்சரிக்கை விடுகிறார் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். தோனியின் மோசமான ஆட்டம் காரணமாக அவரை பலர் ஓய்வு பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.