எப்படி நடக்கும்
இதை எல்லா வீரர்களும் இப்போது உலகம் முழுக்க செய்கிறார்கள். கோலி செய்தியாளர் சந்திப்பில் கோபமாக பேசுவதும், பண்ட் கீப்பிங் செய்யும் போது வீரர்களை கிண்டல் செய்வதும் வழக்கமாக நடப்பதுதான். ஆனால் இங்கிலாந்து அணி கடந்த சில மாதங்களில் இதில் கொஞ்சம் எல்லை மீறி செல்வதாக புகார்கள் எழுந்துள்ளது. முக்கியமாக ஆஸ்திரேலியா என்று வந்துவிட்டால், இங்கிலாந்து கொஞ்சம் கூட கருணை காட்டவில்லை.
என்ன செய்தது
கடந்த இலங்கைக்கு எதிரான போட்டிக்கு முன் இயான் மோர்கன் இப்படித்தான் இலங்கை அணியை கிண்டல் செய்தார். இலங்கை அணியில் எல்லோரும் புது வீரர்கள். நாங்கள் எல்லாம் பத்து வருடமாக ஆடுகிறோம். இலங்கையில் உள்ளவர்களுக்கு அனுபவம் இல்லை. இலங்கை அணிதான் உலகக் கோப்பைக்கு சர்ப்ரைஸாக வந்திருக்கும் அணி என்று குறிப்பிட்டு கிண்டல் செய்தார்.
மிக வருத்தம்
இது இலங்கை ரசிகர்களை பெரிய அளவில் மன வருத்தத்திற்கு உள்ளாக்கியது. ஆனால் அந்த போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்தை காலி செய்தது. இங்கிலாந்து அணியை ஒற்றை ஆளாக மலிங்கா சாய்த்த வரலாறு அன்றுதான் அரங்கேறியது. அதே கதைதான் ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் நடந்தது. ஆம் ஆஸ்திரேலியா அணியை தேவை இல்லாமல் சீண்டி இப்போது இங்கிலாந்து சிக்கலில் மாட்டியுள்ளது.
ஆஸ்திரேலியா அணி
ஆஸ்திரேலியா வீரர்கள் ஸ்மித்தும், வார்னரும் அமைதியாக இருக்க, தேவையில்லாமல் அவர்களின் பழைய உப்புத்தாள் சர்ச்சையை வைத்து இங்கிலாந்து வீரர்கள் தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறார்கள். அதிலும், நேற்று இயான் மோர்கன் செய்தியாளர் சந்திப்பிலேயே இதுகுறித்து பேசி இருந்தார். ஸ்மித்துக்கு ஆதரவாக கோலி நடந்தது போல நாங்கள் நடக்க மாட்டோம் என்று கூறினார். இதை ஆஸ்திரேலிய அணியை சீண்டியது.
மோசம்
இதோ இப்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் இங்கிலாந்து தோல்வி அடைந்துவிட்டது. இதனால் தற்போது எல்லோரும் இங்கிலாந்து அணியின் மோசமான சுபாவத்திற்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள். வீரர்களை கிண்டல் செய்வதை விட்டுவிட்டு இங்கிலாந்து ஆட்டத்தில் கவனம் செலுத்தலாம். மூன்று போட்டியில் நீங்கள் தோல்வி அடைந்துவிட்டீர்கள். இனியும் இப்படி பேசிக்கொண்டு இருக்க வேண்டாம் என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.