டாஸ் வென்றது
இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வெல்லும் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் பாகிஸ்தான் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி தற்போது பவுலிங் தேர்வு செய்து இருக்கிறது. இதனால் இந்திய அணி சற்றுநேரத்தில் பேட்டிங் இறங்க உள்ளது.
சிக்கல்
அதன்படி தவான் தற்போது காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகி இருக்கிறார். காயத்தால் இவர் இரண்டு வாரங்களுக்கு விளையாட முடியாது. இதனால் இன்று அவருக்கு பதில் யார் இறங்குவார் என்ற கேள்வி நிலவி வந்தது. இந்த நிலையில் 95% அவரின் இடத்தில் கே எல் ராகுல்தான் இறங்குவார் என்று கூறப்பட்டது. தற்போது அது உறுதியாகி உள்ளது.
வருகிறார்
இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. 4 வது இடத்தில் களமிறங்கும் இவர் பெரும்பாலும் பவுலிங்கும் செய்வார். இதனால் பவுலிங் பேட்டிங் இரண்டிலும் பாகிஸ்தான் அணிக்கு இவர் டஃப் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய அணியில் மிடில் ஆர்டரில் இவர் நிரந்தமாக இடம்பெற இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.
குழப்பம் நீக்கம்
இந்த இடத்தில் விஜய் சங்கர் இறங்குவாரா அல்லது தினேஷ் கார்த்திக் இறங்குவாரா என்பற்று குழப்பம் நிலவி வந்தது. தற்போது குழப்பம் தீர்ந்து இருக்கிறது. இதுகுறித்து விராட் கோலி பேட்டி அளித்த போது, விஜய் சங்கர் மிகவும் உறுதியான வலிமையான வீரர். அவர் தன்னை இன்று நிரூபிப்பார் என்று கூறியுள்ளார்.