என்ன சிக்கல்
இந்த போட்டியில் முக்கியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. 29 வது ஓவரில் ஆப்கானிஸ்தான் வீரர் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால் அதற்கு நடுவர் அலீம் டெர் விக்கெட் கொடுக்கவில்லை. இந்தியாவிற்கு இருந்த டிஆர்எஸ் வாய்ப்பும் ஏற்கனவே முடிந்துவிட்டது. இதனால் கோலி அலீம் டெர்ரிடம் இதுகுறித்து வாதம் செய்தார்.
நீண்ட நேரம்
நீண்ட நேரம் கோலி நடுவரிடம் வாதம் செய்தார். இது சரியான விக்கெட்தான் என்று மீண்டும் மீண்டும் கேட்டார். இதனால் ஆட்டம் கொஞ்ச நேரம் பாதித்தது. அதன்பின்பும் நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை என்றதும் கோலி தனது இடத்திற்கு சென்றார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
என்ன அபராதம்
இந்த நிலையில் அந்த நடுவரிடம் சண்டை போட்டதற்காக கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இவருக்கு எதிராக பிளாக் மார்க் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. கோலி தான் செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டு இருக்கிறார் என்றும் ஐசிசி தெரிவித்து இருக்கிறது.
|
என்ன எதிர்ப்பு
இந்த நிலையில் தற்போது அந்த நடுவர் அலீம் டெர்ருக்கு எதிராக பலர் கருத்து தெரிவிக்க தொடங்கி இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் இந்தியா போட்டியில் அலீம் கொஞ்சம் கூட நியாயமாக செயல்படவில்லை. தொடர்ந்த தவறான முடிவுகளை அளித்து வந்தார் என்று குற்றச்சாட்டது வைத்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் அவர் பாகிஸ்தான் அதனால்தான் இப்படி செயல்படுகிறார் என்றும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.