என்ன பொறுப்பு
2011ல் உலகக் கோப்பை வென்ற கையோடு இந்திய ராணுவத்தில் தோனிக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. பாராசூட் படை பிரிவில் 2011ல் இவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. இது அவரின் ரசிகர்களை பெரிய உற்சாகத்திற்கு உள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் இருந்து அவர் மிலிட்டரி உடையில் கிளவுஸ் அணிய ஆரம்பித்தார்.
பொறுப்பு
அதன்பின் இவர் பாராசூட் படை பிரிவில் வெறும் சிறப்பு லெப்டினன்ட் கர்னலாக மட்டுமில்லாமல் அதில் சென்று பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். ஆம் ஹெலிகாப்டரில் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து பல பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். கிரிக்கெட் உடை, சிஎஸ்கே உடையை தவிர்த்து இவர் ராணுவ உடைகளை அதிகம் உடுத்தி இருக்கிறார்.
சூப்பர் பயிற்சி
அதன்பின் இவர் 2015ல் பாராசூட் படை பிரிவில் முக்கியமான பாராசூட் பயிற்சியை மேற்கொண்டார். அதன்படி இவர் பாராசூட் உதவியுடன் ஹெலிகாப்டரில் இருந்து 1250 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தார். இந்த பயிற்சியை முக்கிய ராணுவ வீரர்கள் மட்டுமே செய்வார்கள். தோனி இதை வெற்றிகரமாக செய்து முடித்தார்.
|
அளித்தார்கள்
இந்த பயிற்சியை பெறுபவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பாலிடான் சின்னம் என்ற சிறப்பு சின்னம் அளிக்கப்படும். இந்த சின்னம் தோனிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. அவரின் பயிற்சியை கவுரவிக்கும் வகையில் இந்த சிறப்பு வாய்ந்த பேட்ச் ராணுவம் மூலம் வழங்கப்பட்டது.
|
செம பாஸ்
இது போன்ற வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும் தோனி, பாலிடான் பேட்ச்சை தனது கிளவுஸிற்கும் கொண்டு வந்தார். ஆம் தனது கிளவுஸில் பாலிடான் பேட்ச் சின்னத்தை பிரிண்ட் செய்து பயன்படுத்தி வந்தார். கடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக உலகக் கோப்பை போட்டியில் அதை பயன்படுத்தினார்.
|
கட்டாயம்
தற்போது அதைதான் நீக்கும்படி, ஐசிசி தோனிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது விதிமுறை மீறல் என்று ஐசிசி கூறியுள்ளது. இதை கவனிக்கும்படி பிசிசிஐக்கு ஐசிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தோனி பாலிடான் பேட்ச் இல்லாமல் களமிறங்கி வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.