எப்படி ரன்கள்
அதன்பின் கோலி இந்திய அணி சார்பாக அதிரடியாக ஆடி வந்தார். இவர் 62 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரி அடக்கம். இவர் செஞ்சுரி அடிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். ஆனால் போட்டியில் மழை குறுக்கிட்டது.
என்ன ரன்கள்
அதன்படி 46.4 ஓவர் இருக்கும் போது இந்தியா 4 விக்கெட்டிற்கு 305 ரன்களுடன் விளையாடி வந்தது. விஜய் சங்கர் ஒரு பக்கம் திணறிக் கொண்டு இருந்தார். அவரை திணறிய நேரத்தில் சரியாக மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி தடைபட்டது. போட்டி அதனுடன் நிறுத்தப்பட்டது .
எத்தனை அடிக்க வேண்டும்
இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் ,இந்த போட்டியில் பெரும்பாலும் டிஎல்எஸ் முறை பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டால் பாகிஸ்தான் அணி 327 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் என்ன
அதே சமயம் போட்டி 40 ஓவராக குறைக்கப்பட்டால் 298 ரன்கள் எடுக்க வேண்டும். ஆனால் போட்டி அதிக நேரம் பாதித்து மழை பெய்து 20 ஓவராக குறைக்கப்பட்டால் பாகிஸ்தான் 183 ரன்கள் எடுத்தால் போதும். இதனால் போட்டி எவ்வளவு நேரம் பாதிக்கிறதோ அவ்வளவு நன்மைகள் பாகிஸ்தானுக்கு ஏற்படும். போட்டி சீக்கிரம் தொடங்கினால் இந்திய அணிக்கு நன்மை.
அதேபோல் தொடங்கியது
அதேபோல் தற்போது இந்த போட்டி விரைவில் தொடங்கி இருக்கிறது. இதில் 35 நிமிடங்கள் போட்டி தடைபட்டது. அதேபோல் 8 நிமிட ஆய்விற்கு பின் போட்டி தொடங்கியது. இந்த நிலையில் போட்டியில் ஒரு ஓவர் கூட குறைக்கப்படவில்லை. இதனால் தற்போது போட்டி தொடர்ந்து இந்திய அணிக்கு சாதகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.