என்ன கணிப்பு
உலகக் கோப்பை போட்டி தொடங்கும் முன் 4 அணிகள் செமி பைனலுக்கு செல்லும் என்று கணிக்கப்பட்டது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள் செமி பைனலுக்கு செல்ல போகிறது என்று கணிப்பு வந்தது. இதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தது.
இப்போது என்ன
ஆனால் தற்போது இந்த கணிப்பில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளது. இப்போது உள்ள நிலவரப்படி இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்து அணிகள் செமி பைனலுக்கு செல்லும் என்கிறார்கள். இந்த நான்கு அணிகள்தான் தற்போது புள்ளி பட்டியலில் முன்னிலையில் உள்ளது.
ஆனால் என்ன
இந்தியாதான் இந்த தொடரில் மிகவும் வலிமையான அணி என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் என்று இந்தியா வீழ்த்திய அணிகள் எல்லாம் மிக மிக வலுவான அணிகள். ஆனால் நியூசிலாந்து அணி சிறிய அணிகளுக்கு எதிராக மட்டுமே தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. இன்னும் வலுவான அணியை நியூசிலாந்து சந்திக்கவில்லை.
என்ன மோசம்
நியூசிலாந்து அணி ஒன்றும் அத்தனை வலுவான அணியாக இல்லை. நியூசிலாந்து வீழ்த்திய அணிகள் எல்லாம் குட்டி குட்டி அணிகள். இதனால் அந்த அணி எப்போது வேண்டுமானாலும் தொடர் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கீழே செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதுதான் மிகப்பெரிய திருப்பம் ஒன்றை ஏற்படுத்த உள்ளது.
எப்படி மாறும்
இதனால் தற்போது சிறப்பாக விளையாடி வரும் வங்கதேசம் அணி புள்ளி பட்டியலில் முன்னேறி 4 வது இடத்தை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது அந்த அணி 5 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. அப்படி நடக்கும்பட்சத்தில் வங்கதேசம் அணி செமி பைனலுக்கு ஷாக் என்ட்ரி கொடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். பெரும்பாலும் செமி பைனலுக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.