செம
இந்திய பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் சொதப்பினாலும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டத்தை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து கொண்டு இருக்கிறார்கள். முக்கியமாக ஜடேஜா மற்றும் தோனி இருவரும் போட்டியை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து கொண்டு உள்ளனர்.
என்ன அதிசயம்
இந்திய அணியில் ஜடேஜா மற்றும் தோனி இருவரும் ஜோடி போட்டு ஆட தொடங்கி உள்ளனர். முக்கியமாக ஜடேஜா 3 சிக்ஸர், 3 பவுண்டரி என்று அரை சதம் அடித்துள்ளார். இன்னொரு பக்கம் தோனி நிதானமாக ஆடி வருகிறார்.
ரோஹித் சிக்னல்
இந்த நிலையில் ஜடேஜா பேட்டிங் செய்து கொண்டு இருக்கும் போது ரோஹித் சர்மா அவரை பார்த்து கையை தூக்கி நீ ஆடு என்பது போல சிக்னல் காட்டினார். அதிலும் உனக்கு பலம் இருக்கிறது. உன்னால் முடியும் என்பதை போல சிக்னல் காட்டினார். இதை பார்த்து ரசிகர்கள் கத்தி கூச்சல் போட்டனர்.
காரணம் என்ன
இதற்கு முன் மும்பையை சேர்ந்த வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சிரேக்கர் ரோஹித் சர்மாவை உயர்த்தி பேசி ஜடேஜாவை ''உதிரிகளின் வீரர்'' என்று கிண்டல் செய்து குறிப்பிட்டு இருந்தார். தற்போது அதற்கு ரோஹித் சர்மாவே தனது சிக்னல் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் என்கிறார்கள்.