ஜடேஜா சுயநலம்
இதைத் தொடர்ந்து விளையாடிய பான்ட்யா குறைந்த பால்களில் அதிக ரன்களை குவித்தார். பவுண்டரிகள், சிக்ஸர்கள் என தூள் கிளப்பினார். இப்படியே பாகிஸ்தான் வீரர்களே அசரும் அளவுக்கு விளாசிய பாண்ட்யா, சக வீரர் ஜடேஜாவின் சுயநலத்தால் அவுட் ஆகிவிட்டார்.
அபார ஆட்டம்
பாண்ட்யா 43 பந்துகளில் 76 ரன்களை எடுத்தார். அவர் மட்டும் இல்லையென்றால் இந்தியா இரட்டை இலக்க ரன்களை தாண்டியிருக்காது என்று ரசிகர்கள் கருதுகின்றனர். மேலும் ஜடேஜா பாதகம் இழைக்காமல் இருந்திருந்தால் பாண்ட்யா மேலும் பல ரன்களை குவித்திருப்பார்.
பவுலர்களால் கூட வெற்றி
கடந்த 1990-களில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் பவுலர்களான வெங்கடேஷ் பிரசாத், கும்ப்ளே, ஸ்ரீநாத் உள்ளிட்டோரும் தங்களால் இயன்ற அளவுக்கு ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கும் கூட காரணமாகியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் குமுறல்
என்னதான் ஹாக்கியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும், கிரிக்கெட்டில் அதன் பேட்டிங்கும், பீல்டிங்கும், பவுலிங்கும் பெரிய சொதப்பல் என்று ரசிகர்கள் குமுறுகின்றனர்.