For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வார்னர் விளையாடாம இருந்தா, இந்திய அணிக்கு நல்லது தான்... நிறைவேறிய கேஎல் ராகுலின் ஆசை

சிட்னி : நேற்றைய ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா இந்திய அணியை வெற்றி கொண்டுள்ளது.

இந்த போட்டியில் 83 ரன்களை குவித்த டேவிட் வார்னர், பீல்டிங்கின் போது காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து இடையிலேயே வெளியேறினார்.

இந்நிலையில் அவர் தொடர்களில் விளையாடாமல் இருந்தால் இந்திய அணிக்கு நல்லது என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப வார்னர் தற்போது குறைந்த ஓவர்கள் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதை கேப்டன்சி என்றே சொல்ல மாட்டேன்.. என்ன கோலியை பார்த்து கம்பீர் இப்படி சொல்லிட்டாரே.. அடக்கடவுளே! இதை கேப்டன்சி என்றே சொல்ல மாட்டேன்.. என்ன கோலியை பார்த்து கம்பீர் இப்படி சொல்லிட்டாரே.. அடக்கடவுளே!

தொடரை வெற்றிகொண்ட ஆஸ்திரேலியா

தொடரை வெற்றிகொண்ட ஆஸ்திரேலியா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான ஒருநாள் தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி கொண்டுள்ளது. நடந்து முடிந்துள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளில் 66 மற்றும் 51 ரன்கள் வித்தியாத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலியா வெற்றி கொண்டுள்ளது.

காயம் காரணமாக வெளியேற்றம்

காயம் காரணமாக வெளியேற்றம்

இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி முறையே 69 மற்றும் 83 ரன்களை குவித்தார் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர். இதனிடையே, நேற்றைய போட்டியின் பீல்டிங்கின்போது ஒரு பந்தை தடுக்க முற்பட்ட அவருக்கு காயம் ஏற்பட்டு போட்டியின் இடையிலேயே வெளியேறினார்.

வெளியேற்றப்பட்ட வர்னர்

வெளியேற்றப்பட்ட வர்னர்

இதையடுத்து அவர் அடுத்ததாக ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடர்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். மேலும் வரும் 17ம் தேதி துவங்கவுள்ள டெஸ்ட் போட்டிகளில் விளையாட அவர் தனது பிட்னசை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வார்னர் குறித்து கேஎல் ராகுல் விருப்பம்

வார்னர் குறித்து கேஎல் ராகுல் விருப்பம்

இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கேஎல் ராகுல், அடுத்தடுத்த போட்டிகளில் வார்னர், விளையாடாமல் இருந்தால் இந்திய அணிக்கு நல்லது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் வார்னர் போன்று எந்த வீரருக்கும் நடைபெற கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும்

உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும்

மேலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய பௌலர்கள் போராடி வருவதாக கூறப்படுவதை மறுத்துள்ள கேஎல் ராகுல், ஆஸ்திரேலிய பேட்டிங் பிட்ச்களுக்கு ஏற்ப தங்களை பௌலர்கள் உடனடியாக மாற்றிக் கொண்டு பந்து வீச வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

Story first published: Monday, November 30, 2020, 13:35 [IST]
Other articles published on Nov 30, 2020
English summary
Bowlers need to adapt quicker to good batting pitches -KL Rahul
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X