சூப்பர் வாட்சன்
தொடர்ந்து ஆடிய சென்னை அணியின் தொடக்க வீரர் வாட்சன் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு பந்து மீதமிருக்கையில் சென்னை வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் சென்னை அணி 16 புள்ளிகளுடன் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
மிக்க மகிழ்ச்சி
போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஹர்பஜன் சிங் கூறியதாவது : எப்போதும் சென்னை மைதானத்தில் விளையாடுவது மகிழ்ச்சியானது. உடல் நிலை காரணமாக 2 போட்டிகளில் விளையாடவில்லை.
இதயத்தை சோதித்தோம்
தற்போது அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி. போட்டியை 19 ஓவரிலே முடிக்க திட்டமிட்டோம். ஆனால், இறுதி ஓவர்களில் நமது இதயத்தினை வீரர்கள் சோதித்து பார்த்தனர்.
வாட்சன் சிறப்பு
வாட்சன் சிறப்பாக ஆடினார். சென்ற ஆண்டு இறுதிப்போட்டியில் அவர் தனியாக நின்று ஆடியது போல நேற்றைய போட்டியிலும் ஆடினார். சென்னை அணியின் ரசிகர்கள் இந்த மைதானத்தில் அற்புதமாக ஆதரவு அளித்தனர்.
பலம் வேண்டும்
எங்களை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்த அவர்கள் எங்களை விட பல மடங்கு பலத்துடன் விளையாடினால் மட்டுமே எங்களை வீழ்த்த முடியும் அந்த அளவிற்கு இங்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம் என்று ஹர்பஜன் கூறினார்.