என்ன நடந்தது?
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன சிட்னி டெஸ்ட் போட்டியின் போது சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் இந்திய வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் பும்ராவை இனவெறியுடன் திட்டினர். அவர்கள் கேப்டன் அஜின்க்யா ரஹானேவுடன் அம்பயரிடம் சென்று புகார் கூறினர்.
அம்பயர்கள் சொன்ன யோசனை
அப்போது நடந்த நிகழ்வுகளை விசாரித்த அம்பயர்கள், இந்திய வீரர்கள் ரசிகர்களின் செயல்பாடுகளால் மன உளைச்சலில் இருந்தால் போட்டியை பாதியில் கைவிட்டு வெளியேறலாம் என கூறி உள்ளனர். விதிப்படி இவ்வாறு செய்யலாம்.
மறுத்த ரஹானே
ஆனால், அம்பயர் சொன்ன அந்த யோசனையை உடனடியாக மறுத்து இருக்கிறார் அஜின்க்யா ரஹானே. நாங்கள் இந்த விளையாட்டை விரும்பி ஆடுகிறோம். ஆடுகளத்தை விட்டு வெளியேற மாட்டோம் என அவர் திட்டவட்டமாக கூறி, அந்த ரசிகர்களை வெளியேற்றிய பின் தொடர்ந்து இந்திய அணியை ஆடச் செய்தார்.
தப்பித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா
ஒருவேளை ரஹானே அப்போது இந்திய அணியை வெளியேறும் என அறிவித்து இருந்தால் இந்த டெஸ்ட் தொடர் பாதியில் கைவிடப்பட்டு இருக்கும். அது கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகத்துக்கு பெரும் இழப்பையும், சிக்கலையும் ஏற்படுத்தி இருக்கும். ரஹானே முடிவால் தப்பியது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.