அந்த போட்டி
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 194 ரன்கள் குவித்தது. இந்த கடின இலக்கை இந்திய அணி துரத்தியது. தவான் 52, ராகுல் 30, கோலி 40 ரன்கள் குவித்தனர்.
இரண்டு சிக்ஸ்
கடைசி சில ஓவர்களில் பரபரப்பு நீடித்தது. 3 ஓவர்களில் 37 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டம் ஆடி அணியை வெற்றி பெற வைத்தார். கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
அதிரடி ஆட்டம்
ஹர்திக் பாண்டியா இந்தப் போட்டியில் 22 பந்துகளில் 42 ரன்கள் குவித்து இருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் 90, 28, 92* ரன்கள் குவித்து இருந்தார். தொடர்ந்து பெரிய இன்னிங்க்ஸ் ஆடி அதிர வைத்தார்.
மைக்கேல் வாகன் புகழாரம்
இந்த நிலையில் அவரைக் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் புகழ்ந்து இருக்கிறார். அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை, ஐபிஎல் தொடர் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்கள் நடைபெற உள்ளது.
தோனி, கோலி
அந்த மூன்று தொடர்களில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆடும் பட்சத்தில் கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டாராக உயர்வார் எனக் கூறினார். அந்த பதவியை தோனி பல ஆண்டுகளாக வைத்து இருந்தார். தற்போது விராட் கோலி வைத்துள்ளார்.
அடுத்த சூப்பர் ஸ்டார்
அதை இந்திய வீரர்கள் தான் எப்போதும் வைத்துள்ளனர். அந்த வரிசையில் அடுத்ததாக ஹர்திக் பாண்டியா அந்த அடுத்த சூப்பர் ஸ்டாராக இருக்கலாம் என்றார் மைக்கேல் வாகன். பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தை பலரும் தோனியுடன் ஒப்பிட்டு பேசி வரும் நிலையில் இதை அவர் கூறி உள்ளார்.