சிக்கிய வீரர்கள்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் முகமது ஷமி காயம் அடைந்து வெளியேறினார். அதற்கு முன் இஷாந்த் சர்மா காயம் அடைந்து தொடரிலேயே பங்கேற்கவில்லை. உமேஷ் யாதவ், பும்ரா என இந்திய அணியின் நான்கு வேகப் பந்துவீச்சாளர்களும் காயத்தில் சிக்கினர்.
விஹாரி, பண்ட்
மறுபுறம் அஸ்வின், ஜடேஜா மூன்றாவது டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்தனர். இவர்கள் யாரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. விராட் கோலி விடுப்பில் இருக்கிறார். ரிஷப் பண்ட், ஹனுமா விஹாரிக்கும் காயம் ஏற்பட்டது.
கேள்வி
பண்ட் காயத்தை மீறி போட்டியில் பங்கேற்றுள்ளார். நான்காவது டெஸ்டில் வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனிக்கு காயம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய தொடரை முடித்த பின் காயத்தில் சிக்கி இருக்கும் வீரர்கள் எத்தனை பேரால் மீண்டும் போட்டிகளில் உடனடியாக பங்கேற்க முடியும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
குறைந்த நேரம்
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பிப்ரவரியில் துவங்க உள்ளது. இந்திய வீரர்கள் அதற்கு தயாராக மிகக் குறைந்த அளவிலான நேரமே உள்ளது. சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தால் அது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.