மூன்றாவது டெஸ்ட்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி போராடி டிரா செய்தது. இந்திய அணி தோல்வி அடைந்துவிடும் என்று பலரும் நினைத்த நிலையில் அஸ்வின் மற்றும் விஹாரியின் சிறப்பான தடுப்பாட்டம் காரணமாக இந்திய அணி தோல்வியை தவிர்த்து ஆட்டத்தை டிரா செய்தது.
ஆட்டம் சிறப்பு
இந்த போட்டியில் இந்திய வீரர் பண்டின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது.அதிரடியாக ஆடிய பண்ட் 97 ரன்கள் எடுத்த போது அவுட்டானார். இன்னும் கொஞ்ச நேரம் இவர் ஆடி இருந்தால் இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியையும் கூட வென்று இருக்கும்.
மூன்றாவது மேட்ச் டிரா
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போதே இவர் உடலில் கடுமையான வலி இருந்து இருக்கிறது. பேட் கும்மின்ஸ் வீசிய பந்து ஒன்று இவரின் உடலை தாக்கியதில் முதுகில், விலா எலும்பிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் காரணமாக பண்ட் கடுமையாக கஷ்டப்பட்டு இருக்கிறார்.
கஷ்டம்
ஆனால் இவர் பாதியில் வெளியேறினால் இந்திய அணி தோல்வி அடைத்தாலும் அடைய வாய்ப்புள்ளதால், உடலில் ஊசி போட்டுகொண்டு ஆடி உள்ளார். வலி தெரியாமல் இருக்க மரப்பு ஊசி போட்டுகொண்டு மைதானத்தில் பேட்டிங் செய்துள்ளார். இரண்டு ஊசிகள் இதனால் இவருக்கு போடப்பட்டுள்ளது.
வலி
இதனால் போட்டிக்கு பின் இவர் மிகவும் சோர்வாக உணர்ந்து உள்ளார். வலியால் மிக கடுமையாக இவர் கஷ்டப்பட்டு இருக்கிறார். ஊசி போட்டு அன்று விளையாடினேன், இன்னும் கொஞ்ச நேரம் களத்தில் இருந்திருந்தால் இந்திய அணியை வெற்றிபெற வைத்து இருப்பேன் என்று பண்ட் பேட்டி அளித்துள்ளார்.