கடைசி டெஸ்ட்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது கடினம் என்றாலும் டிரா செய்யும் சூழ்நிலை உள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸில் 369 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 336 ரன்கள் எடுத்தது.
வலையை வீசுங்க
அடுத்ததாக ஆஸ்திரேலியா இரண்டாம் இன்னிங்க்ஸில் பேட்டிங் செய்து வந்தது. அப்போது வாஷிங்க்டன் சுந்தர் பந்து வீசினார். அப்போது விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த ரிஷப் பண்ட், "இதே போல வலையை வீசுங்க.." என்றார்.
என்ன வலை?
அதன் பின்பு தான் அவர் சொன்ன வலை எது? என்பது தெரிய வந்தது. ஸ்பைடர்மேன் கார்ட்டூனின் ஹிந்தி பதிப்பு பாடலை பாடத் துவங்கினார் ரிஷப் பண்ட். அப்போது தான் அவர் சொன்ன வலை, ஸ்பைடர்மேனின் வலை என புரிந்தது.
சின்னப்புள்ளத்தனமா இருக்கு
என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு? என பல ரசிகர்கள் அவர் பாட்டை கேட்டு கடுப்பானார்கள். ஆனால், சில ரசிகர்கள் ரிஷப் பண்ட் வேற லெவல் என அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அவர் இது போல நடந்து கொள்வதும், ஆஸ்திரேலிய வீரர்களை கிண்டல் செய்வது இது முதல்முறை அல்ல.