For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவருக்கு பெரிய தோனின்னு நினைப்பு! கேப்டனை நம்ப வைத்து ஏமாற்றிய இளம் வீரர்.. ரசிகர்கள் சரமாரி திட்டு!

Recommended Video

Pant trolled by fans after failed in drs | ரிஷப் பண்ட்டுக்கு ரசிகர்கள் சரமாரி திட்டு

டெல்லி : இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் சிறு தவறு நடந்தாலும் அது ரசிகர்கள் கண்ணை உறுத்தி விடும்.

அப்படிப்பட்ட ரிஷப் பண்ட் முதல் டி20 போட்டியில் பெரிய தவறுகளை செய்தால் ரசிகர்கள் விடுவார்களா? இணையத்தில் ரிஷப் பண்ட்டை திட்டியும், கலாய்த்தும் கருத்துக்கள் பரவி வருகின்றன.

அதிலும், தான் பிடித்தது சரியான கேட்ச் தான் என கேப்டனை நம்ப வைத்து டிஆர்எஸ் கேட்குமாறு கூறி ஏமாற்றினார் பண்ட். அவரும் ஏமாந்து போனார் என்பது தான் இதில் உச்சகட்டம்.

முதல் டி20யில் தோல்வி

முதல் டி20யில் தோல்வி

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 148 ரன்கள் குவித்தும், பந்துவீச்சிலும், சில டிஆர்எஸ் முடிவுகளிலும் சொதப்பியதால் தோல்வி அடைந்தது.

ரிஷப் பண்ட் பேட்டிங்

ரிஷப் பண்ட் பேட்டிங்

பார்ம் அவுட்டில் இருக்கும் ரிஷப் பண்ட் இந்தப் போட்டியில் பேட்டிங் சரியாக ஆடுவாரா? என்பதை பலரும் உற்று கவனித்து வந்தனர். ரிஷப் பண்ட் 26 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே எடுத்து நிதான ஆட்டம் ஆடினார். அவர் ஏன் அதிரடியாக ஆடவில்லை என்பதை சிலர் குறை கூறினர்.

இரண்டு வாய்ப்புகள்

இரண்டு வாய்ப்புகள்

அடுத்து இந்திய அணியின் பந்துவீச்சின் போது சாஹல் வீசிய 10வது ஓவரில் இரண்டு முறை எல்பிடபுள்யூ வாய்ப்புகளை கணித்து ரிவ்யூ கேட்குமாறு கேப்டனிடம் கூறத் தவறினார் பண்ட். பொதுவாக பந்துவீச்சாளரை விட விக்கெட் கீப்பர் தான் எல்பிடபுள்யூ வாய்ப்புகளை சரியாக கணிக்க முடியும். அதில் சொதப்பினார்.

தவறான டிஆர்எஸ்

தவறான டிஆர்எஸ்

அதே ஓவரின் கடைசி பந்தை கேட்ச் பிடித்தார் பண்ட். பந்து எட்ஜ் ஆகி வந்ததாக நினைத்து அவுட் கேட்டார். ஆனால், அம்பயர் மறுக்கவே, கேப்டனிடம் ரிவ்யூ கேக்குமாறு கூறினார். ரீப்ளேவில் பந்து, பேட்டில் படவில்லை எனத் தெரிந்தது.

ரசிகர்கள் கடும் விமர்சனம்

ரசிகர்கள் கடும் விமர்சனம்

ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் வாய்ப்புகள் மற்றும் ஒரு டிஆர்எஸ் என மூன்று வாய்ப்புகளை இந்தியா வீணடித்ததால் ரசிகர்கள் கோபம் கொண்டனர். பலரும் ரிஷப் பண்ட் தான் இதற்கு முழு காரணம் என அவரை குறி வைத்து கேலியும், திட்டும் கலந்து கருத்துக்களை பகிரத் துவங்கினர்.

இவரு பெரிய தோனி!

இவரு பெரிய தோனி!

பலரும் "இவருக்கு பெரிய தோனின்னு நினைப்பு" என்கிற ரீதியில் தான் கலாய்த்து இருக்கின்றனர். சிலர் பண்ட்டை ஏன் அணியில் தேர்வு செய்தீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளனர். அவற்றில் சில -

தோனியை உருவாக்க முடியாது

"தேர்வாளர்கள் வாய்ப்பு கொடுத்தால் தோனியை உருவாக்கினோம். அதே போல, வாய்ப்பு கொடுத்து ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு கொடுக்கிறோம் என்கிறார்கள், ஆனால், தோனியை உருவாக்க முடியாது" என்று கூறி பண்ட், என்றுமே தோனி ஆக முடியாது என கலாய்த்து இருக்கிறார்.

அரசியல் இருக்கலாம்

"ரிஷப் பண்ட் தேர்தல் ஓட்டு இயந்திரம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு இருப்பார் போல.." என மோசமாக செயல்படும் பண்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டத்தில் அரசியல் இருக்கலாம் என ஒருவர் கூறி இருக்கிறார்.

அவங்களுக்கு வாய்ப்பு கொடுங்க

"சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஷுப்மன் கில் ஆகியோர் வெளியே பெஞ்சில் அமர்ந்து இருக்கிறார்கள். ஏன் தொடர்ந்து ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு அளித்துக் கொண்டே இருக்கிறீர்கள்?" என தேர்வுக் குழுவை விமர்சித்து இருக்கிறார்.

ரோஹித் ஏமாந்த போது..

கேப்டன் ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் சொன்ன டிஆர்எஸ் ரிவ்யூவை நம்பி ஏமாந்த போது என்ன நடந்தது என ஒருவர் மீம்ஸ் போட்டு கலாய்த்து இருக்கிறார்.

Story first published: Monday, November 4, 2019, 13:19 [IST]
Other articles published on Nov 4, 2019
English summary
IND vs BAN : Rishabh Pant trolled by fans after failed in DRS attempt. Fans criticized him comparing with MS Dhoni skills.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X