பயிற்சியாளர்
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரஹாம் தோர்ப், ஜானி பேர்ஸ்டோ முதல் டெஸ்ட் முடிந்த உடன் அணியுடன் இணைவார் என பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். அதாவது, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பார் என்ற அர்த்தத்தில் அவர் பேசியது கவனம் பெற்றது.
விளக்கம்
இந்த நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி ஜானி பேர்ஸ்டோ மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியில் தான் பங்கேற்பார் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஊடகப் பிரிவு வேக வேகமாக விளக்கம் அளித்துள்ளது. இதனால், இங்கிலாந்து அணி வட்டாரத்தில் என்ன நடக்கிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
திரும்பப் பெறப் போவதில்லை
ஜானி பேர்ஸ்டோ சுழற் பந்துவீச்சை சமாளித்து ஆடுவதில் வல்லவர். எனவே, அவரை இந்தியாவில் நடக்கும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் ஆட வைக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அவருக்கு ஓய்வு அளித்ததை திரும்பப் பெறப் போவதில்லை என இங்கிலாந்து அணி தற்போது தெளிவுபடுத்தி இருக்கிறது.
ஓய்வு
டி20 உலகக்கோப்பை, ஐபிஎல் தொடர் ஆகியவற்றில் ஜானி பேர்ஸ்டோ ஆட வேண்டும் என்பதால் அவருக்கு நீண்ட டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அணி தரப்பில் கூறப்படுகிறது. இதன் விளைவு என்னவாக இருக்கும் என டெஸ்ட் தொடரின் போது தான் பார்க்க முடியும்.