மான்செஸ்டர் : நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு நியூசிலாந்து அணி பரிசாக எராளமான வைடுகளை வாரி வழங்கியது.
நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 239 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணிக்கு துவக்கம் அதிர்ச்சியாக அமைந்தது. ரோஹித், கோலி, ராகுல் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினர்.
பின்னர் மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக் 6, பண்ட், பண்டியா தலா 32 ரன்கள் மட்டுமே எடுத்தனர். தோனி, ஜடேஜா கடைசி வரை போராடினர். கடைசி 10 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா ஆடிய போது வைடு பந்துகள் வீசி அவ்வப்போது இந்திய அணிக்கு ரன்களை வாரி வழங்கியது நியூசிலாந்து.
36வது ஓவர் முதல் 45வது ஓவர் வரை மட்டும் 5 வைடுகள் கொடுத்தது. 45வது ஓவர் வரை 13 வைடுகள் வீசி ரன்களை வாரி வழங்கியது நியூசிலாந்து. இந்திய அணியும் 13 வைடுகள் கொடுத்து இருந்தாலும் அதில் நான்கு ரன்கள் வைடு மூலம் சென்ற பவுண்டரியை சேர்ந்தது.
குறைந்த ரன்கள் சேஸிங்கில் நியூசிலாந்து அணி அதிக வைடு வீசியது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது.