வெற்றி கிடைக்குமா?
ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5 - 0 என ஆதிக்கம் செலுத்தி வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரில் திணறி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட அந்த தொடரில், இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது இந்திய அணி. மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது.
ஆடுகளம் எப்படி?
மூன்றாவது போட்டி நடைபெறும் ஆடுகளத்தில் இதுவரை ஆடிய அணிகள் சராசரியாக 280 ரன்கள் குவிக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது.
கோலி முடிவு
கேப்டன் கோலி இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார் என தெரிகிறது. கேதார் ஜாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல் இரண்டு போட்டிகளில் பந்து வீச வாய்ப்பு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளே வந்த மனிஷ் பாண்டே
கேதார் ஜாதவ்வுக்கு பதில் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய மனிஷ் பாண்டே அணியில் தேர்வு செய்யப்பட்டார். அவர் டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட நிலையில், ஒருநாள் போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் அவர் சிறப்பாக ஆடும் பட்சத்தில் அவர் ஒருநாள் அணியில் நிரந்தர இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
இந்திய அணி விவரம்
மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் விவரம் - ப்ரித்வி ஷா, மயங்க் அகர்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், மனிஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா
இந்தியா பேட்டிங்
இந்திய அணி இந்தப் போட்டியிலும் சுமாரான துவக்கம் பெற்றது. மயங்க் அகர்வால் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்து வந்த கோலி 9 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். ஸ்ரேயாஸ் ஐயர், ப்ரித்வி ஷா தொடர்ந்து பேட்டிங் செய்தனர். இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 56 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இழந்து ஆடி வருகிறது.