327 ரன்களுக்கு ஆல் அவுட்
2வது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் என்ற ஸ்கோருடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீச இந்திய அணி மேலும் 55 ரன்கள் சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பும்ரா அபாரம்
சிறப்பான பந்துவீச்சு மூலம் தென்னாப்பிரிக்க அணி ஆட்டத்தை தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது . இதனையடுத்து தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் களமிறங்கினர். கேப்டன் எல்கார் 1 ரன்னில் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து முகமது ஷமி, அனல் பறக்க பந்துவீசினார்.சிறப்பான பந்துவீச்சு மூலம் தென்னாப்பிரிக்க அணி ஆட்டத்தை தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது . இதனையடுத்து தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் களமிறங்கினர். கேப்டன் எல்கார் 1 ரன்னில் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து முகமது ஷமி, அனல் பறக்க பந்துவீசினார்.
முகமது ஷமி பிளான்
குறிப்பாக ஏய்டன் மார்க்கரத்திற்கு ஷாட் பால் வீசி திணறடித்தார் ஷமி. இதனால் அடுத்த பந்தும் ஷாட் பாலாக இருக்கும் என மார்க்ரம் எதிர்பார்க்க, ஷமி ஸ்டம்புகளை குறிவைத்து அவுட்டாக்கினார்.இதே போன்று பீட்டர்சனையும் ஷமி பெவிலியனுக்கு அனுப்பினார். வென்டர் டுசனை 3 ரன்களில் சிராஜ் ஆட்டமிழக்க வைத்தார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 32 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Recommended Video
போராடும் தெ.ஆப்பிரிக்கா
தற்போது தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சரிவில் இருக்கும் அணியை மீட்க போராடி வருகின்றனர். முதல் இன்னிங்சில் எந்த அணி முன்னிலை பெறுகிறதோ , அந்த அணிக்கே வெற்றி பிரகாசமாக இருக்கும். தற்போதைய சூழலில் இந்தியாவின் கையே ஓங்கி உள்ளது. முதல் நாளில் 90 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்த நிலையில், 3வது நாளில் 34 ஓவர்களிலேயே 11 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளது. இதற்க மைதனத்தில் இருக்கும் ஈரப்பதமே காரணம் என்று கருதப்படுகிறது.