கடினமாக இருந்தது
வெற்றி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் பெவுமா, இது கொஞ்சம் கடினமான செஸிங்காக இருந்தது. இந்திய அணி வீரர்கள் புதிய பந்தை நன்றாக வீசி நெருக்கடி அளித்தார்கள். நான் பொறுமையாக விளையாட முயற்சித்தேன் அதனால் கிளாசென் இறுதியில் வந்த தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான் கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்று நினைத்தேன்.
பாராட்டு
ஆனால், எங்களுக்கு தேவையான முடிவுகள் கிடைத்துவிட்டன. இன்றைய ஆட்டத்தில் சில விசயங்கள் கற்று கொள்ள வாடயப்பு கிடைத்தது. ஆட்டத்தின் பாதியிலேயே செங் கடினமாக இருக்க போகிறது என்று தெரிந்துவிட்டது, அதனால் சில ஓவர்களிலேயே உத்வேகத்தை இழக்க விரும்பவில்லை. எங்களுடைய திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தினோம்.
கிரிக்கெட் வாழ்க்கை தப்பித்தது
ஆட்டநாயகன் விருது பெற்ற கிளான், இந்தியாவுக்கு எதிராக ரன்களை குவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. குயின்டன் டி காக், 2 நாட்களுக்கு முன்கே தன்னிடம் காயம் அடைந்திருப்பதை கூறினார். இதனால் மனதளவில் இந்தப் போட்டிக்காக தயாராகினேன். நான் கடந்த 2 ஆண்டுகளாக சரிவர விளையாடவில்லை. இந்த இன்னிங்ஸ் மூலம் என் கிரிக்கெட் வாழ்க்கை கொஞ்சம் நீடிக்கும் என நம்புகிறேன்.
ரிஷப் பண்ட் குறை
தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரிஷப் பண்ட், பேட்டிங்கில் 10,15 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோம். பந்துவீச்சாளர்கள் முதல் பத்து ஓவரை வர நன்றாக வீசினார்கள். அதன் பிறகு திட்டத்தை அவர்கள் நடைமுறைப்படுத்த தவறிவிட்டார்கள். அடுத்த போட்டியிலாவது சுழற்பந்துவீச்சாளர்கள் சரியாக பந்துவீச வேண்டும். கடைசி 3 போட்டியில் வெற்றி பெற முயற்சிப்போம்.