பண்ட் மீதான விமர்சனம்
இந்திய அணி 211 ரன்களை அடித்தும் தோற்றுவிட்டது என்றால் ஒட்டுமொத்தமாக பந்துவீச்சாளர்கள் சொதப்பியது தான் காரணம். ஆனால், அதே சமயம், கேப்டன் ரிஷப் பண்டும் பந்துவீச்சாளர்களை சரி வர பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. கட்டாக் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம். அங்கு அடிக்கப்பட்ட சராசரி ஸ்கோரே 135 ரன்கள் தான்.
சுழற்பந்துவீச்சு அட்டாக்
இதனால் தென்னாப்பிரிக்காவை சமாளிக்க சுழற்பந்துவீச்சு கொண்ட அட்டாக்கை இந்தியா பயன்படுத்த உள்ளது. முதல் டி20 போட்டியில் சாஹலுக்கு 2 ஓவர் மட்டுமே தந்தார். அதே போன்று ஹர்திக் பாண்டியாவுக்கும் ரிஷப் பண்ட் ஒரு ஓவர் மட்டுமே தந்தார். இதனால், இருக்கின்ற 6 பந்துவீச்சாளர்களை எப்படி பந்துவீசுவது என்றும், கில்லர் மில்லர் மற்றும் வெண்டர் டூசனை சமாளிக்க யுத்திகளும் வகுக்கப்பட்டுள்ளன.
உம்ரான் மாலிக்
இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கியுள்ள ருத்துராஜ் கெய்க்வாட், அதிரடியாக விளையாட தொடங்கினாலும் 20, 30 ரன்களில் ஆட்டமிழந்து விடுகிறார். இதனால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்டித கொண்டு பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார். இன்றைய ஆட்டத்தில் உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு தரப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
பிளேயிங் லெவன்
இந்திய அணி 1, ருத்துராஜ், 2, இஷான் கிஷன். 3. ஸ்ரேயாஸ் ஐயர். 4. ரிஷப் பண்ட். 5. ஹர்திக் பாண்டியா, 6. தினேஷ் கார்த்திக். 7. அக்சர் பட்டேல். 8. ஹர்சல் பட்டேல். 9. புவனேஸ்வர் குமார். 10. சாஹல். 11 அவேஷ் கான்
தென்னாப்பிரிக்க அணி 1, குயின்டன் டி காக், 2. பெவுமா, 3. வெண்டர் டுசன், 4. டேவிட் மில்லர். 5. ஸ்டம்ஸ். 6. பெர்னல். 7. பிரிட்டோரியஸ். 8. கேசவ் மகாராஜ். 9. ஷாம்சி. 10. ரபாடா. 11. நோக்கியா