அதிரடி ஆட்டம்
அதிரடியாக விளையாடிய மாயங் அகர்வாலும் 23 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.இதனையடுத்து ஃபார்மில் இல்லாத புஜாராவும், ரஹானேவும் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கும் பணியை தொடங்கினர். வந்த வேகத்தில் இருவரும் ஆட்டமிழப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்
100 ரன்கள் ஜோடி
குறிப்பாக புஜாரா 62 பந்துகளில் அரைசதம் விளாசினார், இது புஜாராவின் 3வது அதிவேக அரைசதமாகும். மறுமுனையில் ரஹானேவும் அரைசதம் கடக்க, 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 118 ரன்கள் சேர்த்தது. ரஹானே 58 ரன்கள் சேர்த்து இருந்த போது ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது
ஆடுகளம் மாறியது
முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய கடினமாக இருந்த ஆடுகளம், தற்போது பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியுள்ளது,. ஆடுகளத்தில் இருந்த ஈரப்பதம், குறைந்தது. மேலும் வெயில் காரணமாக ஆடுகத்தின் தன்மையும் மாறியது. இதன் காரணமாக ரஹானே, புஜாரா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். ஜோகனஸ்பர்கில் மழை பெய்யாத வரை ஆடுகளம் கடைசி 2 நாட்களும் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருக்கும், அதே சமயம் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் என்பதால் பந்துவீச்சாளர்களும் மிரட்ட முடியும்முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய கடினமாக இருந்த ஆடுகளம், தற்போது பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியுள்ளது,. ஆடுகளத்தில் இருந்த ஈரப்பதம், குறைந்தது. மேலும் வெயில் காரணமாக ஆடுகளம் தன்மையும் மாறியது. இதன் காரணமாக ரஹானே, புஜாரா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். ஜோகனஸ்பர்கில் மழை பெய்யாத வரை ஆடுகளம் கடைசி 2 நாட்களும் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருக்கும், அதே சமயம் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் என்பதால் பந்துவீச்சாளர்களும் மிரட்ட முடியும்
Recommended Video
பெரிய இலக்கு
இதனால் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு 300 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். இலக்கு 200 ரன்களாக இருந்தால் தென்னாப்பிரிக்க அணி போட்டியை வென்றுவிடும். இந்த டெஸ்டில் விராட் கோலி இருந்திருந்தால்,பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் அவர் இரட்டை சதமே விளாசி இருப்பார். தற்போது இரு அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதால் ஜோகனஸ்பர்க் டெஸ்ட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.