பாறை எல்கார்
முதல் டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சிலே டீன் எல்கார் தாம் யார் என்று நிரூபித்துள்ளார். தற்போது இந்தியா 2வது டெஸ்டில் தோற்க முக்கிய காரணம் டீன் எல்கார் தான். முதல் இன்னிங்சில் சுமார் 3 மணி நேரம் களத்தில் தாக்குப் பிடித்து 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். 2வது இன்னிங்சில் 5 மணி நேரத்திற்கு மேல் களத்தில் பாறையில் போல் நின்று தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
டீன் எல்கார் தாக்கு
டீன் எல்காரை ஆட்டமிழக்க வைக்க, இந்திய வீரர்கள் ஷாட் பாலை அதிகமாக பயன்படுத்தினர். ஆனால் அதனை எல்லாம் அவர் கண்டு கொள்ளவே இல்லை. பாறை போல் நின்று பந்தை உடம்பில் வாங்கி கொண்டார். இந்த வெற்றி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கார், என்னை அவுட்டாக்க வேண்டும் என்று இந்திய வீரர்கள் ஷாட் பந்தை வீசியது போல் தெரியவில்லை
நிறுத்தி கொள்ளுங்கள்
இதனால், இனி என்னை பந்தால் தாக்குவதை இந்திய வீரர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார். பந்தை உடலால் தடுப்பதை முட்டாள்தனம் என்று சிலர் கூறுவார்கள், நான் இதனை வீரமாக தான் பார்க்கிறேன். என்னை தாண்டி தான் ஜெயிக்க வேண்டும் என்று உடல், பொருள் ஆவியை வைத்து நான் விளையாடினேன் என்றால் அணியில் உள்ள மற்ற வீரர்களும் அதை செய்ய வேண்டும்.
Recommended Video
எல்கார் யுத்தி
மூன்றாம் நாள் முடிவில் எனக்குள் நானே கூறி கொண்டேன். என்ன நடந்தாலும் விக்கெட்டை இழக்க கூடாது என்று. இதனால் இந்திய வீரர்கள் சிராஜ், ஷர்துல் தாக்கூர் என்னை திட்டிய போது நானும் அமைதியாக இல்லாமல் பதிலுக்கு பேசினேன் என்று கூறினார். இதன் மூலம் எனக்கு ஷாட் பால் வீசினால் பிரச்சினையே இல்லை என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் டீன் எல்கார்.