305 ரன்கள் இலக்கு
தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 305 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்து இருந்தது. 5வது நாள் ஆட்டத்தை தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 94 ரன்கள் என்ற ஸ்கோருடன் 5வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சால் , தென்னாப்பிரிக்க அணி 191 ரன்களில் சுருண்டது
கோலி சாதனை
சென்சூரியன் மைதானத்தில் 9 நாடுகள் ஒரு டெஸ்ட் போட்டியாவது இங்கு விளையாடி இருக்கிறது. அதில் இந்தியாவை தவிர எந்த ஒரு ஆசிய அணியும் சென்சூரியனில் வென்றது இல்லை. அசாரூதீன், டிராவிட், தோனி தலைமையிலான இந்திய அணி செய்யாத சாதனையை விராட் கோலி செய்துள்ளார்.
முதல் வெற்றி
கடந்த 2000ஆம் ஆண்டு சென்சூரியனில் முதல் முறையாக இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா தனது 2வது இன்னிங்சையும், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சையும் விளையாடாமல் டிக்ளேர் செய்து. நேரடியாக 2வது இன்னிங்சில் இங்கிலாந்து களமிறங்கி 249 ரன்கள் என்ற இலக்கை வெற்றிக்கரமாக எட்டியது.( இதற்கு மேட்ச் பிக்சிங்கை காரணமாக கூறப்பட்டது)
இந்தியாவின் சாதனை
அதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டில் தான் ஆஸ்திரேலிய அணி சென்சூரியனில் வெற்றியை ரூசித்தது. அதன் பிறகு வேறு எந்த அணியும் செய்யாத சாதனையை இந்தியா செய்துள்ளது. இதற்கு இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களும், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு மட்டுமே காரணம். விராட் கோலி தைரியமாக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ததே வெற்றிக்கு காரணம் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்