சேஸிங்
இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 264 ரன்கள் குவித்தது, லீட்ஸ் மைதானத்தில் இதுவே சவாலான இலக்கு என்ற நிலையில் இந்தியா சேஸிங் செய்யத் துவங்கியது. இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, ராகுல் அபார துவக்கம் அளித்தனர்.
ரோஹித் - ராகுல் அபாரம்
ரோஹித் சர்மா 103, ராகுல் 111 ரன்கள் எடுத்தனர். இவர்கள் இருவரின் ரன் குவிப்பால் வெற்றிக்கு அருகே சென்றது இந்தியா. இவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பின் கோலி பொறுப்பாக நின்று ஆடி வந்தார்.
பண்ட் அவசரம்
வெற்றிக்கு 21 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய ரிஷப் பண்ட் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் பொறுப்பாக ஆட மாட்டார் என சிலர் கூறும் விமர்சனத்துக்கு மேலும் வலு சேர்த்து விட்டு சென்றார்.
தோனிக்கு முன் பண்டியா
அடுத்து பேட்டிங் வரிசையில் தோனி களமிறங்கி இருக்க வேண்டும். ஆனால், ஹர்திக் பண்டியாவை அழைத்தார் கோலி. பண்டியா 7 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தோனியை நம்பவில்லை
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 8 ஓவர்களில் 12 ரன்களே தேவை என்ற நிலையில், தோனி களமிறங்கி இருந்தால், அதிரடியாக ஆடாமல், பொறுமையாக ரன் சேர்த்து இருப்பார். அதனால் தேவையற்ற பரபரப்பு ஏற்படும் என்பதால் கோலி, தோனியை நம்பாமல், பண்டியாவை அழைத்தார்.