முக்கிய காரணம்
இந்த 3 தொடர் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தவர் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர். ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் அவ்வபோது சொதப்பிய போதும், மிடில் ஆர்டரில் தொடர்ச்சியாக 3 அரைசதங்களை அடித்து அணியை காப்பாற்றினார். நேற்றைய போட்டியில் 45 பந்துகளில் 73 ரன்களை விளாசியிருந்தார். முதல் 2 டி20 போட்டிகளில் 57, 74 ரன்களை குவித்திருந்தார்.
ஸ்ரேயாஸின் சாதனை
இந்நிலையில் இதன் மூலம் புதிய சாதனை ஒன்றை ஸ்ரேயாஸ் படைத்துள்ளார். அதாவது 3 போட்டிகள் கொண்ட ஒரு டி20 தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் 204 ரன்களை விளாசியுள்ளார். இதற்கு முன்னர் விராட் கோலி முதலிடத்தில் இருந்தார். அவர் கடந்த 2016ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 199 ரன்களை அடித்ததே சாதனையாக இருந்தது.
டாப் 5 வீரர்கள் பட்டியல்
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலை பார்க்கலாம்.
204 - ஸ்ரேயாஸ் ஐயர் vs இலங்கை 2022
199 - விராட் கோலி vs ஆஸ்திரேலியா 2016
183 - விராட் கோலி vs வெஸ்ட் இண்டீஸ் 2019
164 - கே.எல்.ராகுல் vs வெஸ்ட் இண்டீஸ் 2019
159 - ரோகித் சர்மா vs நியூசிலாந்து 2021
உலக சாதனை
சர்வதேச அளவில் கூட இந்த சாதனையை ஒரே ஒரு வீரர் மட்டுமே செய்துள்ளார். அது டேவிட் வார்னர் தான். இலங்கைக்கு எதிராக கடந்த 2019ம் ஆண்டு ஒரே தொடரில் 217 ரன்களை குவித்திருந்தார். இதில் 2 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும். அவருக்கு அடுத்த பெருமை ஸ்ரேயாஸுக்கு தான்.
Recommended Video
டி20 உலகக்கோப்பை
டி20 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனை மனதில் வைத்து இந்திய அணி செயல்பட்டு வரும் நிலையில் ஸ்ரேயாஸின் ஆட்டம் மிடில் ஆர்டரில் பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. இதே போல சூர்யகுமார் யாதவும், தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் மிகச்சிறப்பாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.