விரிசல் உண்மையா?
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதிப் போட்டியுடன் தோல்வி அடைந்து வெளியேறியது. அப்போது கேப்டன் கோலி - ரோஹித் சர்மா இடையே இருந்த விரிசல் பெரிதானதாக கூறப்படுகிறது. ஆனால், அது உண்மையா என இதுவரை பிசிசிஐ எந்த விசாரணையும் செய்யவில்லை.
பிசிசிஐ மறுப்பு
இந்த விவகாரத்தை முதலில் இருந்தே பிசிசிஐ மறுத்து வந்தது. அணியில் எந்த விரிசலும் இல்லை. வீரர்கள் வந்து கூறினால் தான் விசாரணை செய்வோம். அதுவரை ஊடகத்தில் வருவது எல்லாமே கட்டுக்கதைகள் தான் என சில அதிகாரிகள் கூறினர்.
சமரச முயற்சி
நேரடியாக விசாரணை செய்யவில்லை என்றாலும், மறைமுகமாக பிசிசிஐ சமரசம் செய்து வருகிறது என தகவல்கள் கூறின. இதை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலி - ரோஹித் சர்மா இடையே எந்த விரிசலும் இல்லை என்பதை நிரூபிக்க பகீரத முயற்சிகள் செய்து வருகிறது பிசிசிஐ.
ரோஹித் வீடியோ
அதில் ஒன்றாக ஒரு வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில் இந்திய வீரர் ஜடேஜா சைகை மூலம் சில இந்திய வீரர்கள் போல நடித்துக் காட்ட, அவர்கள் யார் என கண்டுபிடித்தார் ரோஹித் சர்மா. முதலில் பும்ரா போல பந்து வீசிக் காட்டினார் ஜடேஜா. ரோஹித் சர்மா யோசிக்காமல் பும்ரா எனக் கூறினார்.
கேள்வி கேட்ட கோலி
அடுத்து, விராட் கோலி பேட்டிங் செய்யும் போது என்ன செய்வார் என்பதை நடித்துக் காட்டினார் ஜடேஜா. ரோஹித் இரண்டு - மூன்று முயற்சிகளுக்குப் பின் கண்டுபிடித்தார். அப்போது அதே அறையில் தான் அமர்ந்து இருந்தார் கோலி. ஜடேஜா எப்படி நடித்துக் காட்டினார் என சிரித்துக் கொண்டே கேட்டார் கோலி.
|
பிசிசிஐ சமாளிப்பு
இந்த வீடியோவைக் காட்டி இருவருக்குள்ளும் எந்த பிரச்சனையும் இல்லை என கூற முயன்றுள்ளது பிசிசிஐ. ஆனால், அந்த வீடியோவில் ஒரு முறை கூட ரோஹித் சர்மா - கோலி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.