அரைசதம்
பேட்டிங் ஆட ஐந்து போட்டிகளில் வாய்ப்பு பெற்ற ரிஷப் பண்ட் அதில் ஒரு போட்டியில் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். அப்புறம் என்ன? என்று கேட்கலாம். ஆனால், மற்ற போட்டிகளில் அவர் எடுத்த ரன்கள் மிகவும் சொற்பம்.
மோசமான ஷாட்
அணிக்கு தேவையான நேரங்களில் மோசமான ஷாட் ஆடி அவுட் ஆவதை வழக்கமாக வைத்துள்ளார் ரிஷப் பண்ட். உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு பெற்ற அவர், அந்த போட்டிகளில் பெரிதாக ரன் எடுக்காவிட்டாலும், 30. 40 ரன்கள் எடுத்து மிடில் ஆர்டரில் ரன் குவிக்க உதவியாக இருந்தார்.
எடுத்த ரன்கள்
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் நான்காம் இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பு பெற்றார். இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் எடுத்த ரன்கள் 20, 0. அதற்கு முன் டி20 தொடரில் அவர் எடுத்த ரன்கள் 0, 4, 65*.
டெஸ்ட் போட்டிகள்
ஒரே ஒரு அரைசதம் அடித்து விட்டு, மற்ற போட்டிகளில் இப்படி மோசமாக ஆடி வருவதால் ரிஷப் பண்ட் நிலை மோசமாக உள்ளது. குறிப்பாக குறைந்த ஓவர் போட்டிகளை காட்டிலும் டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் இடம் உறுதி என கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கும் இப்போது சிக்கல் எழுந்துள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்
இனி வரும் டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கம் என்பதால் ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணி வலுவான அணியுடன் களமிறங்கி வெற்றி பெற வேண்டும். பரிசோதனை முயற்சிகள் எடுக்க வாய்ப்பே இல்லை.
கடைசி வாய்ப்பு
அதனால், ரிஷப் பண்ட் பார்ம் அவுட் எனத் தெரிந்தால் அவரை டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்படும். வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான பயற்சிப் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் தான் ரிஷப் பண்ட்டுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும்.
இரண்டு வீரர்கள்
இந்த வாய்ப்பிலும் அவர் சொதப்பும் பட்சத்தில் விரிதிமான் சாஹா அல்லது ஸ்ரீகர் பிரசாத் ஆகிய இருவரில் ஒருவர் டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பர். சாஹா ரிஷப் பண்ட்டுக்கு முன்பு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்தார்.
ஆப்பு
ஸ்ரீகர் பிரசாத் உள்ளூர் போட்டிகளிலும், இந்தியா ஏ அணிக்காக ஆடிய போட்டிகளிலும் ரன் மழை பொழிந்துள்ளார். இவர்கள் இருவரும் தான் ரிஷப் பண்ட்டுக்கு ஆப்பு வைக்கப் போகிறார்கள். இனி வரும் வாய்ப்புகளை பண்ட் கோட்டை விடாமல் கவனமாக ஆட வேண்டும்.