For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்கப்பா கோலியை காணோம்? ரோஹித் மட்டும் இருக்காரு.. அந்த புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை!

Recommended Video

ரிஷப் பந்த் வெளியிட்ட புகைப்படத்தால் மீண்டும் சர்ச்சை

மியாமி : ரிஷப் பந்த் வெளியிட்ட ஒரு புகைப்படத்தால் மீண்டும் விராட் கோலி - ரோஹித் சர்மா விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஆகஸ்ட் 3 முதல் விளையாட உள்ளது.

முதல் இரண்டு போட்டிகள் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற உள்ளது. அதற்காக இந்திய அணியினர் ப்ளோரிடாவின் மியாமி நகரில் முகாமிட்டுள்ளனர்.

கோலி - ரோஹித் விவகாரம்

கோலி - ரோஹித் விவகாரம்

உலகக்கோப்பை தொடர் முடிந்தது முதல் ரோஹித் சர்மா- விராட் கோலி மோதல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. கோலி அளித்த பேட்டியில், அணியில் எந்த பிளவும் இல்லை என சத்தியம் செய்தாலும், ரோஹித் சர்மா ஆங்காங்கே தன் எதிர்ப்பை சூசகமாக கூறி வருகிறார்.

அந்த புகைப்படம்

இந்த நிலையில், மியாமி நகரில் ஊர் சுற்றிக் கொண்டு இருக்கும் இந்திய வீரர்களில், ரிஷப் பந்த் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டார். அதில் சக இந்திய வீரர்கள் ஷிகர் தவான், புவனேஸ்வர் குமார், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரோஹித் சர்மா இடம் பெற்று இருந்தனர்.

கோலி எங்கே?

கோலி எங்கே?

இதைப் பார்த்த சிலர் விராட் கோலி எங்கே போனார் என சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். சாதாரணமாக அனைத்து இந்திய வீரர்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்துக்கு செல்ல மாட்டார்கள். அப்படி இருந்தும், தற்போது அணியில் பிளவு இருப்பதாக செய்திகள் வரும் நிலையில், இந்த சாதாரண புகைப்படம் கூட சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

கோலி வெளியிட்ட புகைப்படம்

ரிஷப் பந்த் வெளியிட்ட புகைப்படத்துக்கு முன் மற்றொரு புகைப்படத்தால் சர்ச்சை எழுந்தது. அது கேப்டன் விராட் கோலி அமெரிக்கா கிளம்பும் முன் மியாமிக்கு செல்கிறோம் என்று கூறி சில வீரர்களை புகைப்படம் எடுத்து பகிர்ந்தார். அதில் ரோஹித் சர்மா இல்லை என சர்ச்சையை கிளப்பினர் சிலர்.

இதெல்லாம் ஒரு சர்ச்சையா?

இதெல்லாம் ஒரு சர்ச்சையா?

சில பொதுவான ரசிகர்கள் "போட்டோவில் ஆள் இல்லை என்பது ஒரு சர்ச்சையா?" என கேட்டாலும், ரோஹித் - கோலி ரசிகர்கள் மாறி, மாறி கேள்வி கேட்டு சர்ச்சையை வளர்த்து வருகின்றனர். பிசிசிஐ எந்த கோலி - ரோஹித் இடையே எந்த சண்டையும் இல்லை என கூறினாலும், ரோஹித் நடவடிக்கைகள் அப்படி இல்லை.

ரோஹித் வெளியிட்ட மர்ம ட்வீட்

ரோஹித் வெளியிட்ட மர்ம ட்வீட்

இதற்கு உதாரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிளம்பிய பின் ரோஹித் சர்மா வெளியிட்ட ஒரு பதிவை கூறலாம். அதில், "நான் ஒவ்வொரு முறை களமிறங்கும் போது அணிக்காக மட்டும் ஆடவில்லை. நாட்டுக்காகவும் தான் ஆடுகிறேன்" என குறிப்பிட்டு இருந்தார்.

Story first published: Thursday, August 1, 2019, 15:12 [IST]
Other articles published on Aug 1, 2019
English summary
IND vs WI 2019 : Rishabh Pant shared a group photo which stirs controversy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X