மாற்றம் இல்லை
இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் ரோகித் சர்மா அணியில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராமல் அதே அணியை களமிறக்கிவிட்டார். மேற்கிந்திய தீவுகள் அணியை பொறுத்தவரை ஜேசன் ஹோல்டர் அணிக்கு திரும்பியுள்ளார். ஃபெபியன் ஆலன் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
பிளான்
டாஸை இழந்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி அதிக ரன்களை நிர்ணயிக்க முயற்சி செய்வோம் என்று தெரிவித்தார். இந்தப் போட்டியில் எந்த பிளானும் கிடையாது, முதல் பந்தில் இருந்தே அடிக்கிறது தான் பிளான் என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.
100வது போட்டி
இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொலார்ட் தனது 100வது டி20 போட்டியில் இன்று விளையாடுகிறார். இதுவரை 99 சிக்சர் அடித்துள்ள பொலார்ட், இன்று சம்பவம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பனிப்பொழிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதால் முதலில் பந்துவீசுவதாக பொலார்ட் கூறினார்.
கவாஸ்கர் கருத்து
இதனிடையே, இந்தியா டாஸ் இழந்தது நல்லது தான் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இந்தியா டாஸை வென்று சாதகமான சூழலில் விளையாடுவது எந்த பயனும் அளிக்காது. இது போன்று டாஸை இழந்தால் தான் இந்தியாவுக்கு நல்ல சவாலாக இருக்கும் என்று கவாஸ்கர் தெரிவித்தார். பனிப்பொழிவின் பந்துவீசும் போது பந்துவீச்சாளர்களுக்கு நல்ல அனுபவம் தரும் என்று தெரிவித்தார்.