ரோகித் பதில்
இந்த நிலையில், வீடியோ கான்பிரசிங் மூலம் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ரோகித் சர்மாவிடம் , விராட் கோலி ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் கடுப்பான ரோகித், விராட் கோலியை நான் பார்க்கும் போது எல்லாம், அவர் நல்ல உத்தேவத்துடன் தான் உள்ளார். 10 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவுக்காக விராட் கோலி விளையாடியுள்ளார்.
அமைதியாக இருங்கள்
விராட் கோலிக்கு நெருக்கடிகளையும், அழுத்தங்களை எல்லாம் எப்படி கையாள வேண்டும் என்றும் நன்றாக தெரியும், நீங்கள் எல்லாரும் அமைதி காத்தாலே அவர் சரியாகிவிடுவார் என்று கோபமாக பதில் அளித்தார். ஒருநாள் தொடர் முடிந்ததும் இதே கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர்.
ஒரு வாரத்தில் இருமுறை
அதற்கு, விராட் கோலி ஃபார்ம் குறித்து அணி நிர்வாகத்துக்கு எந்த கவலையும் இல்லை. அவர் தென்னாப்பிரிக்க தொடரில் கூட நன்றாக விளையாடினார். கோலிக்கு எந்த சிக்கலும் இல்லை. விராட் கோலிக்கு நம்பிக்கை தேவைப்படுகிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, நீங்க என்ன பேசுறீங்கனு தெரிஞ்சு தான் பேசுறீங்களா என்று காட்டமாக பதில் அளித்தார்.
கடைசி 6 போட்டி
விராட் கோலி சதம் விளாசி கடைசியாக இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. கோலி கடைசியாக விளையாடிய 6 சர்வதேச ஒருநாள் போட்டியில் 2 அரைசதம், 2 டக் அவுட் ஆகியுள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் கோலி 20 ரன்களை தாண்டவில்லை. இதனால் கேப்டன் பதவி சென்ற அதிருப்தியில் கோலி இப்படி விளையாடுவதாக விமர்சனம் எழுந்த நிலையில், ரோகித் சர்மா அவருக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.