டி20 தொடர் நாயகன்
சமீபத்தில் நடந்து முடிந்துள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறப்பான தருணங்களை அளித்துள்ளார். மேலும் டி20 தொடரின் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். அந்த தொடரில் சிறப்பான கேம் பினிஷராகவும் அவர் விளங்கினார்.
கபில் தேவ் பாராட்டு
இதையடுத்து அவரை டெஸ்ட் தொடரிலும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அவர் பௌலிங்கில் கவனம் செலுத்தினால் மட்டுமே தேர்வாளர்கள் அவரை தேர்வு செய்வார்கள் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார். இந்நிலையில் டி20 வடிவத்தில் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு குறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பரிசோதிக்க கபில் ஆலோசனை
மேலும் டி20 வடிவத்தில் ஹர்திக் பாண்டியாவை 4வது இடத்தில் இறக்கி கேப்டன் விராட் கோலி பரிசோதித்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாட 3 வீரர்களின் அவசியம் குறித்து சுட்டிக்காட்டிய கபில், இதில் பாண்டியாவை சோதித்து பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய அணியை உருவாக்க ஆலோசனை
டி20 உலக கோப்பையை முன்னிட்டு, மயங்க் அகர்வால், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட இளம் வீரர்களை அணி நிர்வாகம் சோதனை செய்து பார்க்க வேண்டும் என்றும் இத்தகைய பரிசோதனைகளை மேற்கொண்டு புதிய அணியை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஐபிஎல்லை இதற்கு சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கபில் குறிப்பிட்டுள்ளார்.