தொடர் தோல்வி
ஆனால் ஒருமுறை கூட இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் சரியாக ஆடவில்லை. 4வது வீரராக இந்திய அணியில் களமிறங்கிய ரிஷப் பண்ட் மட்டும் இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடினார். ஆனால் அவரின் ஐபிஎல் ஸ்டைல் ஆட்டம் இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை.
தோல்விக்கு காரணம்
இந்திய அணியின் தோல்விக்கு காரணம் கூட இதுதான் என்று கூறலாம். ஆம் இந்திய அணியின் மிடில் ஆர்டர் கொஞ்சம் வலுவாக இருந்திருந்தால் உலகக் கோப்பையில் இந்தியா வென்று இருக்கும். ஆனால் மிடில் ஆர்டர் வீரர்கள் யாருமே இந்திய அணிக்கு தேவையான நேரத்தில் சரியாக கைகொடுக்கவில்லை .
மனிஷ் பாண்டே
இந்த நிலையில்தான் இந்திய ஏ அணிக்காக மேற்கு இந்திய தீவுகளில் விளையாடி வரும் மனிஷ் பாண்டே அங்கு 4வது வீரராக இறங்கி அதிரடியாக ஆடி வருகிறார். மிக மோசமான பவுலிங் பிட்சில் அவர் 87 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர் என்று 100 ரன்கள் அடித்துள்ளார். தற்போது இந்திய ஏ அணியின் கேப்டனாக அவர் இருக்கிறார்.
செம பாஸ்
அதேபோல் இந்த தொடர் முழுக்கவே அவர் நான்காவது வீரராக இறங்கி நன்றாக ஆடி வருகிறார். அணியின் கேப்டனாக இருந்து தற்போது தொடர்ந்து இரண்டு வெற்றிகளை குவித்து உள்ளார். இதனால் மேற்கு இந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிரான அந்த தொடரில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
அதே வீரர்
இதனால் இந்திய அணி இத்தனை நாட்கள் தேடிய அந்த மிடில் ஆர்டர் வீரர் இவர்தானோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இவரை முன்பே எடுத்து இருக்கலாமோ, இவ்வளவு நாள் எப்படி தவற விட்டோம், இப்படி மிஸ் செய்துவிட்டோமே என்று தேர்வுக்குழு தற்போது வருத்தம் அடைந்துள்ளது.