மும்பை:உலக கோப்பையில் எந்த அணியும் எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். எனவே இந்திய அணி கவனமுடன் விளையாட வேண்டும் என்று ரகானே கூறியிருக்கிறார்.
உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது பெரிதும் எதிர்பார்த்த அஜிங்க்யா ரகானே இடம்பெற வில்லை. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தார். ஸ்மித் வந்தவுடன் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. ஐபிஎல் பாதி தொடரில் அவர் சொந்த நாட்டுக்கு திரும்ப மீண்டும் அணியின் கேப்டனானார் ரகானே.
கேப்டன் பதவியிலிருந்து ரகானே நீக்கப்பட்ட பின் அவர் அருமையாக பேட் செய்தார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக ரகானே சதமும் விளாசி அசத்தினார். இந்நிலையில் உலக கோப்பை குறித்து பேசியுள்ள ரகானே, உலக கோப்பை தொடரை இந்திய அணி வெற்றி கரமாக தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
யாராலும் மாத்த முடியாது.. அந்த அணிக்கு தான் உலக கோப்பை...! அடித்துச் சொல்லும் முன்னாள் கேப்டன்
அவர் மேலும் கூறியிருப்பதாவது:முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கி, அதனை அடுத்து வரக்கூடிய ஆட்டங்களிலும் இந்தியா வெளிப்படுத்த வேண்டும். காரணம்... உலக கோப்பையில் எந்த அணியும், எப்போது வேண்டுமானாலும் பார்முக்கு வரலாம்.
எனவே, ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக ஆடுவது என்பது மிக முக்கியம். இந்திய அணியில் பந்துவீச்சு அருமையாக இருக்கிறது. உலக கோப்பை நடைபெறும் இங்கிலாந்து மண்ணில் அவர்கள் விளையாடி இருப்பதால் அங்குள்ள நிலைமை தற்போது நன்றாக தெரியும்.
இந்திய அணி வலுவாக இருக்கிறது. ஆனாலும், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் ஐசிசி தொடர்களில் சிறப்பாக ஆடக்கூடியவை. மேற்கிந்திய தீவுகள் அணியை எப்படி விளையாடும் என்று எப்பவுமே கணிக்க முடியாது. எனவே சிறப்பாக ஆடுவது இந்தியாவுக்கு மிக அவசியம் என்று கூறினார்.