பிரிஸ்பேன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.
இந்த தொடரில் இரு அணிகளும் 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணி தொடர்ந்து தனது போராட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக ஆஸ்திரேலிய கோச் ரிக்கி பாண்டிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான கடந்த 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. மேலும் ஒரு போட்டியில் டிரா செய்து இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் 4வது போட்டி வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடியுள்ளது.
இந்நிலையில், இந்த தொடரில் இந்திய அணியினர் தொடர்ந்து தங்களது போராட்டத்தை வெளிப்படுத்தி வருவதை பார்க்க முடிவதாக ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் கோச் ரிக்கி பாண்டிங் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர்களின் போராட்ட குணம் இந்த தொடரில் அவர்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.