மாற்றம்
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் எதிர்பாராத மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. உமேஷ் யாதவ் இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிங்க் பால் ஆட்டம் என்பதால் இவரின் கம்பேக் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.
ஆச்சர்யம்
ஆனால் ஆச்சர்யமாக இன்று வாஷிங்க்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். கோலியின் இந்த முடிவு பலருக்கும் ஆச்சர்யம் அளித்துள்ளது. இன்று மூன்று ஸ்பின் பவுலர்கள் களமிறங்கி உள்ளனர். அஸ்வின், அக்சர் பட்டேல், வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோர் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர்.
பிட்ச் எப்படி
அகமதாபாத் பிட்ச் முழுக்க முழுக்க ஸ்பின் பிட்சாக மாற்றப்பட்டுள்ளது. சுத்தமாக புற்கள் இல்லாமல் பிட்ச் மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக கூடுதல் ஸ்பின் பவுலர்கள் தேவை என்பதால் இந்திய அணியில் மீண்டும் சுந்தர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
ஸ்பின் அட்டாக்
இதனால் இன்று இந்திய அணியில் ஸ்பின் அட்டாக் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாறாக இங்கிலாந்து அணி மூன்று பாஸ்ட் பவுலர்கள் உடன் களமிறங்குகிறது. ஆர்ச்சர், ஸ்டூவர்ட் போர்ட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளார்.