13 புள்ளிகள் கிடைக்கும்
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூசி. வெற்றி பெற்றால் 13 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெறும். இங்கிலாந்துக்கு 10 புள்ளிகள் கிடைக்கும். பிறகு, பாகிஸ்தான் சந்திக்கும் அடுத்த போட்டியில் வென்றால் 11 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்து செமிபைனலுக்கு செல்லும்.
இந்தியா முதலிடம்
அதே நேரத்தில் தமது கடைசி போட்டியில் இலங்கையை இந்தியா வீழ்த்தினால் 15 புள்ளிகளுடன் முதலிடத்தை பெறும். அதே நேரம் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்காவிடம் தோற்க வேண்டும். அப்போது தான் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் கிடைக்கும்.
தோற்றால் 4வது இடம்
ஒருவேளை இந்த புள்ளி விவரங்கள் நடக்காமல் போனால்... அதற்கும் ஒரு மாற்று வாய்ப்பு இருக்கிறது. நியூசி.க்கு எதிரான ஆட்டத்தில் வென்றால், இங்கிலாந்து 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதிபெறும். நியூசிலாந்து இப்போதுள்ள 11 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்துக்கு போய்விடும்.
அசர வைக்கும் ரன்ரேட்
இதுபோன்ற நிலை உருவானால், பாகிஸ்தான், அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை சாய்க்க வேண்டும். இந்த ரன்ரேட்டானது நியூசிலாந்தின் ரன்ரேட்டை விட அதிகமாக இருக்கவேண்டும்.
அரையிறுதியில் மோதும்
இலங்கையை இந்தியா வென்றால் 15 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்கும். கடைசி லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். இந்த 2 வாய்ப்புகளும் நடக்கும் பட்சத்தில் அதாவது ஏதேனும் ஒன்று நடந்தால் கூட போதும்.... அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் அனல் பறக்கும் போட்டிக்கான சூழல் உருவாகும்.