ஓப்பனிங்கிலேயே குழப்பம்
ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியதால் கே.எல்.ராகுலுடன் ஓப்பனிங் களமிறங்க ஷிகர் தவான், ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷான் என 3 தேர்வுகள் உள்ளன. இதில் சீனியர் வீரர் ஷிகர் தவானுக்கு தான் வாய்ப்புகள் கிடைக்கும் எனத் தெரிகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தவானின் பேட்டிங் சிறப்பாக இருந்துள்ளதால் அவரை தேர்வு செய்யவே கே.எல்.ராகுல் திட்டமிட்டுள்ளார். இதனால் இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் இஷான் கிஷானின் காத்திருப்பு நீள்கிறது.
4வது இடம் யாருக்கு
வழக்கம் போல விராட் கோலி முதல் விக்கெட்டிற்கு களமிறங்க 4வது வீரராக யார் களமிறங்குவார் என்பதில் தான் பெரும் குழப்பம் நீடிக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டிருந்த காலத்தில் அவரின் இடத்தில் சூர்யகுமார் யாதவ் விளையாடி வந்தார். ஆனால் தற்போது ஸ்ரேயாஸ் முழு உடற்தகுதியுடன் இருப்பதால் சூர்யகுமாரின் வாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது. டெஸ்ட் தொடரிலேயே வாய்ப்பு கொடுக்காததால், நிச்சயம் ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸுக்கு டிராவிட் வாய்ப்பு தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 சுழற்பந்துவீச்சாளர்கள்
ரவீந்திர ஜடேஜா காயத்தால் விலகியுள்ளதால் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 ஆண்டுகளுக்கு பின்பு ஒருநாள் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கவுள்ளார். அவருக்கு உறுதுணையாக 2வது ஸ்பின்னரும் இணைக்கப்படவுள்ளார். இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் 4வது வேகப்பந்துவீச்சாளராக இருக்க முடியும் என்பதால் சுழற்பந்துவீச்சில் யுவேந்திர சஹால் கம்பேக் கொடுக்க எந்தவித தடையும் இல்லை.
3 வேகப்பந்துவீச்சாளர்கள்
துணைக்கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் முதன்மை தேர்வாக உள்ளனர். 3வது இடத்திற்காக தான் தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் போட்டி போட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலும் சிராஜுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ளேயிங் 11 விவரம்
கே.எல்.ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் / சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், அஸ்வின், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுவேந்திர சாஹல், முகமது சிராஜ்/ தீபக் சஹார்