2 விக்கெட் கீப்பர்கள்
ஆனால், அந்த இன்னிங்சில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் அபாரமாக விளையாடி ரன்கள் குவித்தார். 111 பந்துகளை எதிர்கொண்ட பரத், 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இதே போன்று ரிஷப் பண்ட்டும் அதிரடியாக விளையாடி 76 ரன்கள் குவித்தார்.
விட்டு கொடுத்த ரோகித்
மற்ற இந்திய அணி வீரர்கள் சொதப்பினர். இதனையடுத்து விக்கெட் கீப்பராக ஏற்கனவே ரிஷப் பண்ட், உள்ளதால் கேஎஸ் பரத்துக்கு எங்கே வாய்ப்பு கொடுப்பது என தெரியவில்லை. இந்த நிலையில் பயிற்சி ஆட்டத்தின் 2வது இன்னிங்சில் கேஎஸ் பரத்தை ரோகித் சர்மா தனது இடத்தை விட்டு கொடுத்து ஓப்பனிங் இறங்க வாய்ப்பு கொடுத்தார்.
சுப்மான் 38 ரன்கள்
இதனை பயன்படுத்தி கொண்ட கேஎஸ் பரத் , இரண்டாவது இன்னிங்சிலும் கலக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் சுப்மான் கில் அதிரடியாக விளையாட முற்பட்டு 34 பந்துகளில் 38 ரன்கள் விளாசினார். இதில் 8 பவுண்டரிகள் அடங்கும். ஆனால், கேஎஸ் பரத், டெஸ்ட் இன்னிங்ஸ்க்கு ஏற்றவாறு பந்தை பழசாக்கும் முயற்சியில் இறங்கினார்.
கேஎஸ் பரத் பொறுப்பான ஆட்டம்
தற்போது வரை 72 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த கேஎஸ் பரத் 5 பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 85 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்தது. முதல் இன்னிங்சில் சொற்ப ரன்கள் எடுத்த ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி ஆகியோருக்கு, 2வது இன்னிங்ஸ் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதில் அவர்கள் திறமையை வெளிப்படுத்தினால் தான், பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும்.