கபில் அணி வெற்றி
அந்த தொடரின் அரையிறுதியில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. அதில் இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளர்கள் மாயாஜாலம் காட்ட, இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இங்கிலாந்து எடுத்த ரன்கள் 213 ரன்கள். பின்னர் ஆடிய இந்தியா 4 விக். இழந்து 217 எடுத்து வெற்றி பெற்றது. பின்னர் பைனலில் ஜாம்பவான் வெஸ்ட் இண்டீசை காலி செய்து கோப்பையை தட்டிச் சென்றது.
எதிர்பார்ப்பு
1987ம் ஆண்டு அரையிறுதி போட்டியும் மிகுந்த எதிர்பார்ப்பை எட்டியது. காரணம் நடப்பு சாம்பியன் என்ற அடையாளத்துடம் களம் கண்டு இந்தியா, மற்றொன்று அதே இங்கிலாந்துடனான போட்டி. இவை இரண்டும் போட்டி குறித்த எதிர் பார்ப்பை அதிகரித்தது.
இங்கிலாந்து வென்றது
.ஆனால், எதிர்பாராத விதமாக அந்த போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்று, பைனலில் நுழைந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது. வெற்றி பெறக்கூடிய இலக்கு தான் என்றாலும், இந்தியா 219 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை சாம்பியன்
1996ம் ஆண்டு உலக கோப்பை தொடரான முற்றிலும் வித்தியாசமானது. யாரும் எதிர் பார்க்காத அளவு கத்துக்குட்டி, வீழ்வதற்காக விளையாடும் அணி என்று பெயர் பெற்ற இலங்கை சாம்பியானது.
இந்தியா தோல்வி
அந்த தொடரின் அரையிறுதியில், இந்தியா, இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை 8 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா தோல்வி கண்டது. தொடக்கத்தில் அற்புதமாக ஆடிய இந்தியா, டெண்டுல்கரின் அவுட்டுக்கு பிறகு சரிந்தது.
ரசிகர்கள் ரகளை
அதனால் ரசிகர்கள் ஆத்திரமடைந்து கலாட்டாவில் ஈடுபட்டனர். பீல்டிங் செய்து கொண்டிருந்த இலங்கை வீரர்கள் மீது இந்திய ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களை வீசினர். கையில் இருந்தவற்றை எல்லாம் போட்டு தீ வைத்து கொளுத்தி ரகளையில் இறங்கினர். வேறு வழியின்றி போட்டி நிறுத்தப்பட்டு, இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்தியா 270 ரன்கள்
2003 உலக கோப்பை தொடரை யாரும் மறக்க முடியாது. அரையிறுதியில் இந்தியா, கென்யா மோதின. முதலில் ஆடிய இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து ஆடிய கென்யா 179 ரன்களில் ஆல் அவுட்டானது. அந்த தொடரில் ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது.
பாக்.குடன் மோதல்
2011ம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதி இதுநாள் வரை கிரிக்கெட் உலகில் நினைவில் நிற்கக் கூடிய போட்டி. அந்த போட்டியில் பரம வைரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்தியா 260 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 231 ரன்களில் சுருண்டது.
ரன் குவித்த ஆஸி.
2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை சந்தித்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 328 ரன்கள் குவித்தது.தொடர்ந்து ஆடிய இந்தியா 233 ரன்களில் சுருண்டு ஏமாற்றம் அளித்தது.
புறப்பட்ட இந்தியா
தற்போது, 2019ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது. இங்கிலாந்துடன் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. உலக கோப்பை வரலாற்றில் 6 முறை அரையிறுதி, 2 முறை உலக சாம்பியன் என்ற சாதனைகளுடன், 7வது முறையாக முனனேறி 3வது முறையாக கோப்பையை கைப்பற்ற கிளம்பியிருக்கிறது இந்தியா.