சிறந்த ஆட்டம்
ரோகித், தவான் இருவருமே தொடக்கம் முதலே சிறப்பாக ஆடினர். தவான் ஆஸ்திரேலிய பவுலர்களின் பந்துகளை பதம் பார்த்தார். ரோகித்தோ வழக்கம் போல தொடக்கத்தில் நிதானமாக ஆட்டம்... பின்னர் ராக்கெட் வேகத்தில் சுழன்றார்.
பவுலர்கள் திணறல்
இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, முதல் விக்கெட்டை வீழ்த்தவே ஆஸி. பவுலர்கள் திணறினர். 92 பந்துகளில் 95 ரன்களை குவித்த ரோகித் சர்மா 5 ரன்களில் சதத்தை தவறவிட்டார்.
தவான் பொறுமை
ஆனால் தவான் பொறுமை காத்தார். காத்திருந்து சதம் அடித்தார். அதன் பிறகு அதிரடியாக ஆடி பவுண்டரிகளை விளாசினார். 115 பந்துகளில் 143 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
விழுந்த விக்கெட்டுகள்
பின்னர் கோலி 7 ரன்களில் ஆட்டமிழக்க, களத்தில் நிலைத்து நின்ற ராகுல் சம்பாவின் பந்தில் வெளியேறினார். அதன்பிறகு ரிஷப் பண்ட் மட்டுமே சில பவுண்டரிகளை அடிக்க, அவரும் 36 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
குறைந்த ரன்கள்
டெத் ஓவர்களை கம்மின்ஸும் ரிச்சர்ட்சனும் அற்புதமாக வீசினர்.370 ரன்களுக்கு மேல் வந்திருக்க வேண்டிய குறைந்தது. கேதர் ஜாதவும் கம்மின்ஸின் பந்தில் வெளியேற, 49வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியை விஜய் சங்கர் அடித்தார்.
|
கடைசியில் சிக்சர்
கடைசி ஓவரிலும் ஒரு சிக்சரை விளாசிய விஜய் சங்கர் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். இன்னிங்ஸின் கடைசி பந்தில் கடைசி விக்கெட்டாக களத்திற்கு வந்த பும்ரா, சிக்சர் அடிக்க பெவிலியனில் இருந்த கோலி கை தட்டி மகிழ்ந்தார்.
இந்தியா 358 ரன்கள்
இதையடுத்து இந்திய அணி 50 ஓவர் முடிவில் 358 ரன்களை குவித்தது. ரோகித், தவானின் அடித்தளத்திற்கு 400 ரன்ளை இந்திய அணி எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏன் என்றால்.. 32 ஓவர்களிலேயே இந்திய அணி 200 ரன்களை எட்டியிருந்தது.
ரன்கள் உயரவில்லை
ஆனால் எஞ்சிய 18 ஓவர்களில் குவித்தது 158 ரன்கள் மட்டுமே. ரோகித் சதம் அடித்திருந்தால் அணியின் ரன் விகிதம் உயர்ந்திருக்கும். ஏன் என்றால்... இதே மைதானத்தில்தான் இலங்கைக்கு எதிராக ரோகித், தமது 2வது இரட்டை சதத்தையும், ஒருநாள் போட்டியில் 3வது இரட்டை சதத்தையும் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.