ஃபாலோ ஆன்
263 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி.நியூசிலாந்து அணிக்கு ஃபாலோ ஆன் தராமல் இரண்டாவத இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய புஜாரா, மாயங் அகர்வால் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்த இந்திய அணி மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து. புஜாரா, அகர்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்தது.
ஏமாற்றம்
அகர்வால் 62 ரன்களக்கு ஆட்டமிழக்க, பொறுப்பாக விளையாடிய புஜாரா 47 ரன்கள் சேர்த்து அக்சர் பட்டேல் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். சுப்மான் கில், விராட் கோலி ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது.சுப்மான் கில்லும் 47 ரன்கள் சேர்க்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, ரவிந்திரா பந்துவீச்சில் பவுல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
இமாலய இலக்கு
ஸ்ரேயாஸ் ஐயர், விரித்மான் சாஹா ஆகியோரும் நிலைத்து நிற்க தவறினர். இறுதியில் அக்சர் பட்டேல் மட்டும் ஆட்டமிழக்காமல் 4 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி7 விக்கெட் இழப்பிற்கு276 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 540 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
கடைசி இன்னிங்ஸ்
இன்னும் இரண்டரை நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், நியூசிலாந்து அணி தனது கடைசி இன்னிங்சில் களமிறங்கியது.கேப்டன் டாம் லத்தம் 6 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினார். ராஸ் டைலர், வில் யங் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, டேரல் மிட்சல் மட்டும் தாக்குபிடித்து 60 ரன்கள் சேர்த்தார். மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் அந்த அணியின் வெற்றிக்கு 400 ரன்களும், இந்தியாவின் வெற்றிக்கு 5 ரன்களம் தேவைப்படுகிறது. . இதனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.