விளையாட வேண்டாம்
இதையடுத்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என்று கோரிக்கை அதிகரித்தது. இது குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறி இருப்பதாவது:
ஏற்று கொள்ள முடியாது
புல்வாமா தாக்குதல் சம்பவத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் எல்லா வகையிலான போட்டியிலும் விளையாடுவதை இந்திய கிரிக்கெட் வாரியம் தவிர்க்க வேண்டும்.
தவிர்க்க வேண்டும்
பாகிஸ்தான் அணியுடன் இறுதிப்போட்டியில் மோத வேண்டிய சூழ்நிலை வந்தால் கூட அந்த போட்டியையும் தவிர்க்க வேண்டும்.ஐசிசி உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடுவதை தவிர்ப்பது இந்தியாவுக்கு கடினமானது.
நாடு தான் முக்கியம்
ஆனால் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுவதை தவிர்க்க வேண்டும். பாகிஸ்தானுடன் விளையாடி 2 புள்ளிகள் கிடைப்பது முக்கியமல்ல. நாடு தான் முக்கியம், நமது ராணுவ வீரர்களின் உயிர் தான் முக்கியம் என்று அவர் கூறியுள்ளார்.