கேப்டனாக தோல்வி
அதன்படி, நடப்பாண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.ஆனால ஒரு போட்டியில் கூட இந்திய அணி வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரின் போது ராகுலுக்கு காயம் ஏற்பட்டது.
அழுத்தம்
இதனையடுத்து, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடர், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் ராகுல் விளையாடவில்லை. அதன் பிறகு, ஐபிஎல் தொடரில் புதிய அணியான லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டார். அப்போதும் ராகுலின் கேப்டன்சி அழுத்தம் அவரது பேட்டிங்கை பாதித்தது. அவர் தன்னலமாக விளையாடுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
மீண்டும் காயம்
குவாலிபையரில் ராகுலின் கேப்டன்சியால் தான் லக்னோ அணி தோற்றது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதன் பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடியது. இதற்கும் கேப்டனாக ராகுல் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு ஒரே ஆண்டில் 5வது முறையாக காயம் ஏற்பட்டு தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.
ஜெர்மனி பயணம்
தற்போது கேஎல் ராகுல் ஓய்வில் இருக்கும் நிலையில், அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதை தடுக்க மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி செல்ல உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடக்கும் பட்சத்தில் கேஎல் ராகுல் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.