தவான் அவுட்
இந்திய அணியின் தொடக்க வீரர் இடத்திற்கு கடும் போட்டி நிலவி வருகிறது. பல இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்து வருகின்றனர். இதனை சரியாக புரிந்து கொள்ளாமல் தவான், வாய்ப்புகளை வீணடித்து வருகிறார் . 17 பந்துகளை எதிர் கொண்ட ஷிகர் தவான் 7 ரன்கள் எடுத்திருந்த போது தேவையில்லாத ஷாட் ஆடி ஆட்டமிழந்தார்.
ரோகித் போல்ட்
எனினும் கேப்டன் ரோகித் சர்மா, இன்று நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார். ரோகித் சர்மா 31 பந்துகளை எதிர்கொண்டு 27 ரன்கள் சேர்த்தார். இதில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்சர்கள் அடங்கும். எனினும் ஷகிபுல் ஹசன் பந்துவீச்சை கணிக்க தவறிய ரோகித் சர்மா கிளீன் போல்ட் ஆனார். இதனையடுத்து, விராட் கோலி 15 பந்துகளில் 9 ரன்கள் எடுத்திருந்த போது, அதே ஓவரில் பெரிய ஷாட் ஆடினார்.
கோலி செம கேட்ச்
அப்போது கவர் திசையில் நின்று கொண்டிருந்த ஷகிபுல் ஹசன், பாய்ந்து கேட்ச் பிடித்தார். இது ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்திய அணி 49 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து, கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஸ்ரேயாஸ் குறை
ஸ்ரேயாஸ் ஐயா அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். எனினும் 24 ரன்கள் எடுத்திருந்த போது அவருடைய குறையான ஷாட் பாலை அடிக்க முயன்று கேட்ச் ஆனார்.இந்திய அணி 92 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. நல்ல வேலையாக இந்திய அணி இன்று 4 ஆல்ரவுண்டரை வைத்து விளையாடுகிறது.